Establishment Procedure and procedural Rules
Efficiency Bar Examination for Officers in Grade 1 of Public ManagementAssistants’ Service – 2014(II)(2017)
EB Exam MSO I Past Paper
Qusition and Answer
Establishment Procedure and procedural Rules தாபன நடைமுறை மற்றும் நடைமுறை விதிகள்
1. (i) “வெளிக்கள அலுவலர்” (Field Officer) என்பதனைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துக.
ஓர் இடவெல்லைக்குள் கட்டுப்படுத்தப்பெறாத களத்தில் ஒழுங்கான வரவுடன் வேலை செய்கின்றவரும், சோதனைசெய்தல், பார்வையிடல் மேற்கொள்ள வேண்டியுள்ள களக் கடமை சம்பந்தப்படுகின்ற, ஏதாவது குறித்த அலுவலகத்துக்கு அறிக்கையிடும் பொறுப்புள்ள ஓர் அரசாங்க அலுவலர் வெளிக்கள அலுவலர் எனப்படுவார்.
(ii) வெற்றிகரமான அலுவலக முறையில் (Office Systems) இருக்க வேண்டிய அடிப்படை இலட்சணங்கள் எவை என்பதனைத் தெளிவுபடுத்துக.
1. ஒழுங்கு முறை : அரச சட்டதிட்டங்கள், ஒழுக்க நெறிமுறைகள் பேணப்படுவதாக நிர்வாகம் அமைதல்,
2. எளிமை : சேவை வழங்குபவரும் சேவையினை பெற்றுக்கொள்பவரும் சேவையின் தன்மையினை ளிமையாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருத்தல்,
3. ஒரே தன்மையை கொண்டிருத்தல் : ஒரே கொள்கையின் கீழ் இயங்கும் சகல அலுவலகங்களின் சேவைகளும் ஒரே தன்மையை கொண்டதாக அமைதல்,
4. நெகிழ்வுத்தன்மை : காலத்திற்கேற்ற வகையில் தொழிநுட்ப வளர்ச்சி மேம்பாட்டுக்கு அமைய சேவைகளும் நெகிழ்வுத்தன்மையுடன் அமைதல்,
5. சிக்கனம் : அலுவலக நிதி திட்டமிடல், ஊழியர் எண்ணிக்கை, சேவை நேரம், இயந்திர உபகரண பாவனை என்பவற்றில் சிக்கனம் பேணப்படுதல்,
6. பாதுகாப்பு : அலுவலகத்தின் சேவைகள் மற்றும் பொதுமக்கள் தொடர்புகளை கையாளல் போன்றவற்றில் சிறந்த பாதுகாப்பு பேணப்படுதல்.
7. தொடர்ச்சியான தன்மை : அலுவலகத்தின் சேவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடையின்றி மேற்கொள்ளப்படுவதற்கான ஒழுங்கமைப்பு,
(iii) கணக்காய்வு அறிக்கை (Audit Report) மூலமாகக் வெளிக்கொணரப்பட்ட துர்நடத்தைகள் சம்பந்தமாக ஒழுக்காற்று அதிகாரியினால் எடுக்க வேண்டிய செயல்முறைகள் எவை என்பதனை விளக்குக.
அ) ஒழுக்காற்று அதிகாரியானவர் கட்டாயமான முறையில் துர்நடத்தைகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அல்லது அலுவலர்களுக்கு எதிராக முறைமைசார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆ) வெளிக்கொணரப்பட்ட கணக்காய்வு அறிக்கை முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எண்பிப்பதற்காக எல்லா அம்சங்களிலும் பொருந்துமாயின் அவ் அறிக்கையின் பேரில் குற்றப்பத்திரமொன்றை வழங்கி முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையொன்றை நடாத்த வேண்டும்.
இ) கணக்காய்வு அறிக்கையைக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு எதிராக குற்றப்பத்திரமொன்றை தயாரித்தல் அல்லது முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றங்களை எண்பித்தல் கடினமாகுமென ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரியவருமிடத்து கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள துர்நடத்தை தொடர்பான விடயங்களை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் அவற்றை உரியமுறையில் ஒழுக்காற்று விசாரணையில் சமர்ப்பிக்ககூடியதாகவும் தாமதமின்றி ஆரம்ப புலனாய்வொன்றை நடாத்துவதற்கும் ஒழுக்காற்று அதிகாரியானவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ) சம்பந்தப்பட்ட ஆரம்பபுலனாய்வு அறிக்கையின் மூலம் ஏதேனுமொரு துர்நடத்தை புரிந்துள்ளதாக பொதுவாகத் தென்படுமாயின் ஒழுக்காற்று அதிகாரியானவர் குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உ) உள்ளக கணக்காய்வு விசாரணை அறிக்கை மூலமாகவும் துர்நடத்தையொன்று பற்றி வெளிவரும் சந்தர்ப்பங்களில் ஒழுக்காற்று அதிகாரியானவர் மேற்கூறிய பிரிவுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. (i) அரச அலுவலரொருவரினை பணித்தடைக்கு உட்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.
அ) அரச கடமை நேரத்தில் குடி போதையில் இருந்தமை, அல்லது மது நாற்றம் வீசிக்கொண்டிருந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைசார் ஒழுக்காற்று விசாரணையொன்றின் போது அக்குற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கு கீழ்படியாமை
இ) அரசுக்கு எதிரான அல்லது பயங்கரவாத அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் நீதிமன்றம் ஒன்றில் வழக்குதாக்கல் செய்துள்ளமை,
ஈ) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்துள்ளமை,
உ) அரசகடமை நேரத்தில் அல்லது அரச அலுவலக அமைவிடத்தில் நச்சுப் போதைப் பொருட்கள் பாவனை அல்லது அவற்றை கைவசம் வைத்திருத்தல்,
எ) அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் அல்லது அவ்வாறு செய்வதற்கு இடமளித்தல் அல்லது கவனமின்மையால் அல்லது ஊக்கமின்மையால் அவை அழிந்துவிடுவதற்கு அல்லது அவற்றின் பெறுமதி குறைவதற்கு இடமளித்தல்
ஏ) கவனமின்மையால் அல்லது வேண்டுமென்று அரசின் சிறப்புரிமைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுதல் அல்லது அவ்வாறு செய்ய இடமளித்தல்,
ஐ) அரசாங்கசேவை அவமானப்படும் வகையில் நடந்து கொள்ளுதல்
ஒ) அரசுக்கு அல்லது அரச சேவைக்கு அல்லது அரசுசார்ந்த நிறுவனமொன்றுக்கு கேடுவிளையக்கூடிய வகையில் தகவல்களை வெளிப்படுத்துதல் அல்லது அரச ஆவணங்களை அதன் பிரதிகளை தகுந்த அரச அதிகாரியொருவரின் அனுமதியின்றி வெளிக்கட்சிக்காரர்களுக்கு வழங்கல்
(ii) பிளந்த கோப்பிடும் முறையிலுள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை கலந்துரையாடுக.
நன்மைகள்
1. விடயத்தின் வரலாற்றினை இலகுவாக ஒரே பார்வையில் அறிந்து கொள்ளலாம்.
2. குறிப்புத்தாள் உள்ளதால் கோவையின் உள்ளே தகவல்களை தேட வேண்டிய அவசியமில்லை
3. திணைக்களத்தலைவருக்கு நேரம் சேமிக்கப்படுகின்றது.
4. புதிய உத்தியோகத்தர் இலகுவாக கோவையில் உள்ள விடயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
5. விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் கடிதத் தொடர்புகளை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
தீமைகள்
1. மேலதிக காகிதாதிகள் தேவை,
2. கோவையின் பருமன் அதிகரிக்கின்றது.
3. குறிப்புத்தாள் தொலைந்தால் திணைக்களத்தலைவரால் வழங்கப்படும் அனுமதிகள் இல்லாமல் போகின்றது.
4. விடய அலுவலருக்கு இரட்டிப்பு வேலை,
5. குறிப்புத்தாள் பேணுவதற்கான நேரம் அதிகமாகின்றது.
(iii) மீள அரச சேவையில் அமர்த்துவதற்கு தகுதியற்ற நபர்கள் யாவர்?
(i) பதவி நீக்கத்திற்குப்பதிலாக கட்டாயமாக இளைப்பாற்றப்பட்டவர்கள்
(ii) ஒழுக்காற்றுக் காரணங்களின் மீது இளைப்பாற்றபட்டவர்கள்,
(iii) பொதுத்திறமையின்மைக்காக இளைப்பாற்றப்பட்டவர்கள்
(iv) சேவை நீடிப்பு மறுக்கப்பட்டதன் விளைவாக இளைப்பாற்றப்பட்டவர்கள்
(v) அரசாங்க கொள்கைத் தீர்மானமொன்றின் பேரில் இளைப்பாறுவதற்கான சம்மதத்துடன் இளைப்பாற்றப்பட்டவர்கள்;
(vi) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் அட்டவணை i இல் அல்லது தாபனவிதிக்கோவையின் தொகுதி ii (Establishment Code II) இல் அமைக்கப்பெற்ற ஏதாவது தவறுக்கு ஓய்வுபெற்ற திகதியிலிருந்து மூன்று வருடங்கள் உடன் முன்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர்
(vii) ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12ஆம் பிரிவின் கீழ் ஓய்வுபெற்றவரும்
(viii) அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுறாதிருப்பவருமான ஒருவர்.
3. (i) அரசியல் உரிமைகளை (Political Rights) அனுபவிப்பதற்கு உரித்தற்ற அலுவலர்கள் யாவர்?
அ) நீதித்துறை உத்தியோகத்தர்கள்
ஆ) ஆயுதப் படை உத்தியோகத்தர்கள்
இ) பொலீஸ்படை அலுவலர்கள்
ஈ) கிராம சேவை உத்தியோகத்தர்கள்
உ) சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்
ஊ) அரச சேவையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள்
எ) அரச சேவைலுள்ள மேற்பார்வை உத்தியோகத்தர்கள்,
ஏ) தேர்தல்கள் திணைக்களத்தில் (பாராளுமன்ற, உள்ளுராட்சி முதலிய தேர்தல்கள்) சேவையாற்றுகின்ற உத்தியோகத்தரொருவர் அவர் அதில் சேவையாற்றும் வரை
(ii) ஆண்டு களஞ்சியக் கணக்கெடுப்பின் (Board of Survey) போது, கணக்கெடுப்பு சபை செயற்படும் முறையினை விளக்குக
1. நிதிப்பிரமாணம் 754 இற்கு அமைய நிதியாண்டு முடிவில் இருப்புப் புத்தகம் சமன் செய்யப்பட்டுள்ளதென களஞ்சிய உத்தியோகத்தரிடமிருந்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளல்,
2. ஒப்பாய்வு செய்யும் திகதிக்கு பொருட் பதிவேட்டுடன் பொருட்களின் மீதி சரியாக உள்ளதா என பரிசீலனை செய்தல்,
3. ஒப்பாய்வு செய்யும் போது பொருள் இருப்புக்களில் வித்தியாசம் காணப்பட்டால் T&A 66இல் பதிந்து நான்கு பிரதியில் சமர்ப்பித்தல்,
4. ஒப்பாய்வின் போது பொது 47 படிவத்தில் குறிப்பிட்டுள்ள திருத்த வேண்டிய, அழிக்க வேண்டிய, விற்பனை செய்ய வேண்டிய பொருட்களை இனம் கண்டு உண்மைப்படுத்துதல்,
5. முடிவில் படிவங்களை கணக்கீட்டு உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல்.
(iii) முறைப்படியான ஒழுக்காற்று விசாரணையொன்றின் போது குற்றம் சாட்டப்பட்ட அலுவலர் சார்பாக எதிர்காப்பு அலுவலரொருவரை நியமிப்பது சம்பந்தமாக தாபன விதிக் கோவைக்கேற்ப (Establishment Code) விடயங்களை விளக்குக.
4. (i) இணைந்த சேவைக்குரிய சேவைகளைக் குறிப்பிடுக. (Combined Service)
(ii) அரச அலுவலகங்களிலிருந்து பதிவேட்டறைக்கு அனுப்பக் கூடாத ஆவணங்களினை உதாரணங்களுடன் குறிப்பிடுக.
(iii) அரச அலுவலகமொன்றில் விடயத்துக்குப் பொறுப்பான அலுவலரொருவர் தனது கோப்பு அல்லது கடிதங்களைத் தொலைத்தல் மற்றும் அவை சம்பந்தமாக மோசடி இடம் பெறுவதைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய படிமுறைகள் எவை என்பதை விளக்குக.
No comments:
Post a Comment