Saturday, November 6, 2021

SLTS III வினைத்திறன் பரீட்சை வினாவிடைகள்

(SLTS III) – Efficiency Bar Examination for Officers in Grade III of Sri Lanka Technological Service – 2017- II (2019) 

இலங்கை தொழிநுட்ப சேவை தரம் III

SLTS III வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2017 – II (2019)  வினாப்பத்திர வினாக்களுக்கான விடைகள்



தாபன விதிகள் & ஆணைக்குழு விதிகள்


தாபன விதிகள் & ஆணைக்குழு விதிகள்


01) கீழே தரப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சுருக்கக் குறிப்புகள் எழுதுக.

(i) அரச உத்தியோகத்தர்

அரசாங்க உத்தியோகத்தர் எனப்படுபவர் நீதித்துறை உத்தியோகத்தர் தவிர ஆனால் பின்வருவோரை அடக்காத இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கீழ் சம்பளம் (salary) வழங்கப்படும் ஏதாவது பதவியையும் வகிக்கும் ஒருவர் எனப் பொருள்படும்,

1. சனாதிபதி,

2. சபாநாயகர்,

3. அமைச்சரொருவர்,

4. பிரதியமைச்சரொருவர்,

5. பாராளுமன்ற உறுப்பினரொருவர்

6. அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர்

7. தேர்தல் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, அரசாங்க சேவை ஆணைக்குழு, ஆகியவற்றின் உறுப்பினரொருவர்,

8. பாராளுமன்ற செயலாளர் நாயகம்,

9. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்,

10. தரைப்படை, கடற்படை, வான்படை உறுப்பினர் ஒருவர். 

(ii) நிரந்தர உத்தியோகத்தர்

அங்கீகரிக்கப்பட்ட பதவியணி (Approved Cadre)  ஒன்றில் உள்ள பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சேவைப்பிரமாணக் குறிப்புக்கு அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அமைய தகுதிகூர் நிலை காலப்பகுதி அல்லது பதிற் கடமை காலப்பகுதி தொடர்பான நிபந்தனைகளுடன் ஓய்வூதிய உரிமைகளுடனோ அல்லது இல்லாமலோ சம்பந்தப்பட்ட நியமன அதிகாரியினால் நியமிக்கப்படும் ஒருவர் நிரந்தர உத்தியோகத்தர் (Permanent Officer) எனப்படுவார். 

(iii) அமைய லீவு

உள்நாட்டிலே கழிப்பதற்காக ஒரே தடவையில் 06 நாட்களுக்கு உட்பட்ட வகையில் ஒருவருடத்திற்கு ஆகக் கூடியது 21 நாட்கள் அமய லீவினை ஒரு உத்தியோகத்தர் பெற்றுக்கொள்ள முடியும் 

அமய லீவானது அமய ரீதியான விடயங்கள் காரணமாக குறுகிய காலப் பகுதியொன்றிற்கு கடமைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த லீவு அரைச் சம்பள லீவுக் காலப்பகுதிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வழங்கப்படமாட்டாது. 

(iv) மாற்றப்பட்ட படிகள்

அலுவலர் ஒருவர் அடிக்கடி பிரயாணம் (Travelling) செய்து வழமையான கடமைகளை மேற்கொள்கின்ற போது அவருக்குக் குறிப்பான  படியொன்றை திணைக்களத் தலைவர் தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தை பெற்று ஒதுக்கலாம்.

இவ்வாறு கடமைக்காக பிரயாணம் செய்கின்ற போது ஏற்படுகின்ற போக்குவரத்துச் செலவினம், இணைந்த படி மற்றும் எல்லா தனிப்பட்ட செலவினங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு படி மாற்றப்பட்ட படி ஆகும்.

(v) பரஸ்பர இடமாற்றம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் விடுக்கும் வேண்டுகோள்களின் பேரில், வழங்கப்படும் இடமாற்றம் பரஸ்பர இடமாற்றம் எனப்படும்.

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கமைய பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பரஸ்பர இடமாற்ற கோரிக்கைகளுக்கான கட்டளைகளை வழங்கப்படுகின்றன. 

(i) உரிய உத்தியோகத்தர்கள் ஒரே சேவையில் ஒரே தரத்தில் அல்லது ஒரே தன்மையான பதவிகளை வகிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

(ii) உத்தியோகத்தர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, உரிய திணைக்களங்களின் தலைவர்கள் தங்களுடைய சம்மதத்தை வழங்கியிருத்தல் வேண்டும்.

(iii) உரிய உத்தியோகத்தர்களுக்கிடையே எவரேனும் உத்தியோகத்தர் ஒழுக்காற்றுக் காரணங்களின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டவராக இருத்தலாகாது;

(iv) உரிய உத்தியோகத்தர்கள் அனைவரும் அவரவரின் தற்போதைய நிலையங்களில் ஆகக்குறைந்தது 02 வருட காலப்பகுதிக்கேனும் சேவையாற்றியிருத்தல் வேண்டும்.

02. அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் செய்யக்கூடிய நியமிப்புக்கள் யாவை?

ஓர் அமைச்சின் மேலதிகச் செயலாளர் (Additional Secretary), சிரேட்ட உதவிச் செயலாளர், திணைக்களத் தலைவர்களல்லாத பணிப்பாளர் அதிபதி (Director General), ஆணையாளர் அதிபதி (Commissioner General), மேலதிக பணிப்பாளர் அதிபதி (Additional Director General), மேலதிக ஆணையாளர் அதிபதி (Additional Commissioner General), பிரதேச செயலாளர் (Divisional Secretary), பிரதிப் பணிப்பாளர் அதிபதி, பிரதி ஆணையாளர் அதிபதி ஆகிய பதவிகளும் மற்றும் இவற்றுடன் ஒப்பு நோக்கத்தக்க பதவிகளும்

(3) அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் செய்யக்கூடிய நியமிப்புக்களை நெறிப்படுத்தும் நியதிகள், நிபந்தனைகளைக் குறிப்பிடுக.

அரசாங்க சேவைப் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படும் ஒவ்வொரு நபரும் இந்நாட்டினதும் அதன் மக்களதும் நலன் பொருட்டு அப்பதவியின் கடமைகளை தளராத ஊக்கத்துடன் நிறைவேற்றுதல் வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் கடப்பாடுகளையும் அரசாங்க சேவைக்கு இந்த ஆணைக் குழுவினால் காலத்துக்காலம் இயற்றப்படும் நடைமுறை விதிகள், ஒழுங்குவிதிகளின் பிரகாரம் நிறைவேற்றுதல் வேண்டும்.

அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதியமுடைய பதவிக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு விதவைகள், அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு அல்லது தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு பங்களிப்புச்செய்தல் வேண்டும்.

நிரந்தரமான ஆனால் ஓய்வூதியமில்லாத பதவியை வகிப்பவரொருவர் அரச சேவை நம்பிக்கை நிதியத்திற்கு உதவுத்தொகை செலுத்துதல் வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர், அரசாங்க உத்தியோகத்தர் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்துக்கு இணங்க, திணைக்களத் தலைவர் தீர்மானித்தபடியான தொகை ஒன்றை, பிணைப்பண வைப்பாகச் செலுத்துதல் வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தரொருவர் இந்நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் அவர் இந்நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்றுவதற்கு உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தகுதியுடையவரென மருத்துவப் பரிசோதனையொன்றின் மூலம் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.

அரசாங்க சேவையில் பதவியொன்றுக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் அரசியலமைப்பின் 4 ஆம் 7 ஆம் அட்டவணைகளின் நியதிகளின் பிரகாரம் உறுதிப்பாட்டை செய்து ஒப்பமிடுதல் வேண்டும். அல்லது சத்தியம் செய்து ஒப்பமிடுதல் வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் அரசாங்க கொள்கையினால் விதித்துரைக்கப்படும் அத்தகைய விதத்தில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றுக் கொள்ளுதல் ணே;டும்.

மாதாந்த வேதனம் பெறுகின்றவரும் தனது பதவியிலிருந்து விலக விரும்புகின்றவருமான அரசாங்க உத்தியோகத்தரொருவர் அவரது நியமனக் கடிதத்தில் வேறுவழியில் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, நியமிப்புச் செய்யும் அதிகாரிக்கு எழுத்தில் உள்ள ஆகக் குறைந்தது ஓர் முழுமாதகால அறிவித்தலை வழங்க வேண்டும்.

நியமிப்புச் செய்யும் அதிகாரி உடன்படுமிடத்து அவர் அரசாங்கத்திற்கு ஒரு மாதவேதனத்திற்குச் சமமான பணத்தொகையைச் செலுத்தி தமது பதவியிலிருந்து விலகலாம். எனினும் நியமிப்புச் செய்யும் அதிகாரி பதவிவிலகலை ஏற்றுக்கொண்டமை பற்றி எழுத்து மூல அறிவித்தலை வழங்கும் திகதியின் பின் மட்டுமே அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் பதவிவிலகல் செயல்வலுப்பெறும்.

நியமிப்பு செய்யும் அதிகாரி நாட்சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தரின் நியமிப்பை அறிவித்தலின்றி முடிவுறுத்தலாம்.

நியமிப்பு செய்யும் அதிகாரி நியமிப்புக் கடிதத்தில் (Appointment Letter) தரப்பட்டுள்ள நிபந்தனைகளின் பிரகாரம் சேவையில் உறுதிப்படுத்தப்படாத, மாதச் சம்பளம் (Monthly Salary) பெறும் உத்தியோகத்தரின் நியமனத்தை முடிவுறுத்துவதற்குக் கருதும்போது அவருக்கு ஒருமாதகால அறிவித்தல் (One Month Notice) வழங்குதல் வேண்டும்.

அரசாங்க சேவையில் உள்ள பதவியொன்றுக்கு உத்தியோகத்தரொருவர் பொய்யான, தவறான தகவல்களை அல்லது ஆவணங்களை நியமிப்பு செய்யும் அதிகாரியிடம் அல்லது வேறு எவராகினும் இயைபுடைய அதிகாரியிடம் சமர்ப்பித்து நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அவர் கடமைகளை ஆரம்பித்த பின்னர் எந்த நேரத்திலாவது முறைப்படி தாபிக்கப்படுமிடத்து அவரின் அத்தகைய நியமனம் உடனடியாக வெற்றும் வெறிதுமானதாக கணிக்கப்பட்டு, அத்தகைய உத்தியோகத்தருக்கு அது குறித்து விளக்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமுகமாக குற்றச் சார்த்துகை பற்றிய அறிவித்தலை வழங்குவதற்கு அமைய அவரது நியமனம் மீளப்பெறப்படும்

(4) அரச சேவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதியோகத்தரின் தனிநபர் கோவையில் (Personal File) உள்ளடக்க வேண்டிய ஆவணங்கள் பத்தினைப் பெயரிடுக.

அ) நியமனக்கடிதத்தின் பிரதி, (Appointment Letter)

ஆ) விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தின் பிரதி,

இ) நியமனத்தின் தன்மைக்கேற்ப பிணைப்பணம் வழங்கும் சான்றிதழின் சான்றுப்படுத்திய பிரதி.

ஈ) படிவம் சுகாதாரம் 169 இன் படியான மருத்திவ அறிக்கை,

உ) கல்விச்சான்றிதழ்,

ஊ) பிறப்பு, திருமண பதிவுகள்,

எ) கடமையை பொறுப்பேற்கும் கடிதத்தின் பிரதி, 

ஏ) வரலாற்றுத்தாள்

ஐ) பொது 160 படிவத்தில் சேவை உடன்படிக்கை 

ஒ) தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி,

ஓ) படிவம் 261 இல் சொத்துக்கள் பிரகடனம். 

(5) தகுதிகூர் நிலைக் காலப்பகுதிக்கு உட்பட்டுள்ள உத்தியோகத்தர் தாம் அரசாங்க சேவையில் நிரந்தரமாக்கப்படுவதற்குத் தகுதியானவர் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய செயல்முறைகளை விளக்குக.

அ) நியமிப்பு செய்யப்பட்ட உத்தியோகத்தர் தனது நியமிப்பிலே விதிக்கப்பட்ட கடப்பாடுகளை தவறாது நிறைவேற்றுதல் வேண்டும்.

ஆ) அரச சேவையில் தன்னை தொடர்ந்து வைத்திருப்பதற்கான தகுதியை நடத்தியாலும் திறமையான சேவையாலும் நிரூபித்தல் வேண்டும்,

இ) தனக்கு வழங்கப்பட்ட வேலைகளை கற்று சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்,

ஈ) பொய், களவு, மோசடிகளில் ஈடுபடாதிருத்தல், 

(6) மேலதிக நேரக் கொடுப்பனவின் போது கவனிக்க வேண்டிய கால வரையறைகள் ஐந்தினை விளக்குக.

அ) அலுவலக நாளுக்குரிய முழுக் கடமை நேரத்திலும் அலுவலர் கடமையாற்றியிருத்தல் வேண்டும்.

ஆ) யாதேனுமொரு நாளில் தாமதமாக வேலைக்கு வந்தமையால் அல்லது அரைநாள் விடுமுறை, போன்ற ஏதேனுமொரு வகையான விடுமுறை காரணமாக கடமை செய்யாத காலத்தை அந்த நாளில் சேவையாற்றிய மேலதிக நேரத்திலிருந்து கழித்துவிட்டு மீதியான காலத்தை மாத்திரமே மேலதிக நேரமாகக் கருத வேண்டும்.

இ) ஒரு தடவையில் அரை மணித்தியாலத்திற்குக் குறைந்த காலத்திற்காக அல்லது ஒரு நாளில் மொத்தமாக ஒரு மணித்தியாலத்திற்குக் குறைந்த காலத்திற்காக மேலதிக நேரப்படியினை வழங்கலாகாது.

ஈ) ஒரு தடவையில் செய்யப்பட்ட மேலதிக வேலையின் மொத்த அளவினைக் கணக்கிடும் போது ஒரு மணித்தியாலத்தில் 1/4 பகுதிக்கு குறைந்த பகுதியினைக் கணக்கிடலாகாது.

உ) வாரத்தை அடிப்படையாகக் கொண்டு கடமை நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வாரத்திற்கென அனுமதிக்கப்பட்டுள்ள மணித்தியாலங்களிலும் பார்க்க மேலதிகமாகப் பணியாற்றுகின்ற மணித்தியாலங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்.

(7) கடமைலீவு பெற்றுக் கொள்ளல் சம்பந்தமாக நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகள் ஐந்தினைக் குறிப்பிடுக.

அ) ஒரு அலுவலர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளல், பொருட் கொள்வனவு அல்லது வழங்கல் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றல்,  ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் போன்ற அரசாங்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வெளிநாடு ஒன்றிற்கு செல்லவதற்கு கடமை லீவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆ) ஒழுக்காற்று விசாரணை ஒன்றின்போது குற்றம் சாட்டப்பட்ட அலுவலர் சார்பாக ஆஜராவதற்கு அலுவலர் ஒருவர் கடமை லீவை பெற்றுக்கொள்ள முடியும்.

இ) அரச அலுவலர் ஒருவர் சாட்சியாளராக விசாரணை ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடமை லீவினை பெற்றுக்கொள்ள முடியும்.

ஈ) அலுவலர் ஒருவர் தொழிற்சங்க உறுப்பினர் ஒருவராக இருக்குமிடத்து கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்கு கடமை லீவை பெற்றுக்கொள்ள முடியும்.

உ)  கிராமோதய சபையொன்றின் தலைவராக விளங்குகின்ற அரசாங்க அலுவலர் ஒருவர், அப் பதவியில் இருக்கும் வரை   வாரத்திற்கு ஒருநாள் கடமை லீவை பெற்றுக்கொள்ள முடியும்.

ஊ) பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பு படையின் அரசாங்க அலுவலர் ஒருவர் கடமை லீவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

(8) அரசாங்க இல்லங்களை வழங்குவதற்கு உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிகாட்டல்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

அ) அலுவலரின் பெயர் காத்திருப்புப் பட்டியலில்  குறிப்பிடப்பட்டிருந்த காலம்.

ஆ) பிள்ளைகளின் எண்ணிக்கை

இ) வாடகை வீட்டில் குடியிருக்கும் அலுவலர் ஒருவராயின், அவரின் அலுவலகத்திற்கும் அவரின் வதிவிடத்துக்கும் இடையிலான தூரம்.

ஈ)   இரவுக் கடமைக்காக அலுவலகத்துக்கு வருகை தருவதற்கான விடயம்.

உ) அலுவலரின் பதவி நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா எனும் விடயம்.

ஊ)  கடுமையான அங்கவீனமொன்று அலுவலருக்கு உள்ளதா எனும் விடயம்

எ)  சேவை மூப்பு.

(9) அரசாங்க இல்லங்கள் சம்பந்தமாக உள்ள குத்தகை நிபந்தனைகளைச் சுருக்கமாக விவரிக்குக.

அ) ஒரு பதவி தொடர்பாக  ஒதுக்கப்பட்ட இல்லமொன்று தவிர்ந்த ஏனைய அனைத்து இல்லங்களினதும் குத்தகைக் காலம் 5 வருடங்களாகும்.

ஆ) அரச இல்லமொன்றை அரச அலுவலர் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.

இ) மீளவும் சேவையில் இணைக்கப்படுகின்ற அரசாங்க அலுவலர்களுக்கு 
இல்லங்கள் தொடர்பான உரித்துக் வழங்கப்பட மாட்டாது.

ஈ) அலுவலர், அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரில் தங்கி வாழ்வோர் ஆகியவர்கள் மாத்திரமே அரச இல்லத்தில் தங்க முடியும்.

உ) அனுமதிக்கப்பட்ட அலுவலரை தவிர்ந்த வேறெவரும் இல்லத்தில் தங்க முடியாது.

ஊ) தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் இல்லங்களை இடைக்காலக் குத்தகைக்குக் கொடுக்க முடியாது.

எ)  இல்லத்திலிருந்து வெளியேறிச் செல்வதற்கு அலுவலர் ஆகக் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னர் உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

ஏ) தவறும் பட்சத்தில் இல்லத்திலிருந்து வெளியேறிய நாளில் இருந்து அறிவித்த மாதத்தின் இறுதி நாள் அல்லது வேறொரு அலுவலர் அவ்வில்லத்தில் வதிவதற்காக வந்த நாள் ஆகிய இரண்டில் எது முதலில் வருகிறதோ அது வரையிலான காலப் பகுதிக்காக வாடகை அறவிடப்படும்.

ஐ) இல்லம் கிடைக்கப்பெற்ற உத்தியோகத்தர் அது தொடர்பான விபரங்களை உரிய திணைக்களத் தலைவருக்கு அறிவித்தல் வேண்டும்.

ஒ) பொருட்களின் சேதங்கள் தொடர்பில் இல்லத்திற்கு ஏற்படக் கூடிய திருத்தச் செலவு உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படும்.

ஓ) அலுவலர் சேவையிலிருக்கும்போது இறந்தால் அது இடம்பெற்ற மாதத்தை அடுத்து வருகின்ற மாதத்தின் இறுதிவரை அவரின் குடும்பத்துக்கு இல்லத்தில் குடியிருக்க அனுமதி வழங்கப்படும்.

ஒள) இல்லத்தின் குத்தகைக் காலத்தின் முடிவில் இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும்.

(10) இடமாற்றம் பெற்றுச் சென்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தமாக அவரது முந்திய நிறுவனத் தலைவரினால் புதிய நிறுவனத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்களைப் பெயரிடுக.

i) நாளது வரைப்படுத்தப்பட்ட வரலாற்றுத்தாளுடன் நாளது வரையாக்கப்பட்ட பெயர் வழிக்கோப்பு;

(ii) உத்தியோகத்தருடைய அடுத்த சம்பள ஏற்றத்தைக் கொடுப்பனவு செய்வதற்காக உத்தியோகத்தரின் கடைசிச் சம்பள ஏற்றத்திகதியிலிருந்து இடமாற்றத்தின் நடைமுறைப்படுத்தல் திகதிவரையுள்ள காலப்பகுதிக்கான அவருடைய எழுத்திலான சிபாரிசு

(iii) உத்தியோகத்தரி;ன் செயலாற்றுகை மதிப்பீட்டு அறிக்கை

(iv) உத்தியோகத்தரின் லீவு விவரங்கள்;

(v) உத்தியோகத்தரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறைப் புகைவண்டி ஆணைச் சீட்டுகள் பற்றிய கூற்று;

(vi) உத்தியோகத்தரின் வேதன விவரங்கள்

(vii) உத்தியோகத்தரின் வரவு மீதிக்கூற்று;

(viii) உத்தியோகத்தரது சேவைக் காலத்தின் போது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரயாண விபரங்கள் அடங்கிய அறிக்கை;

(iv) உத்தியோகத்தர் கலந்து கொண்ட கல்வி நெறிகள், பல்வேறு மாநாடுகள் பற்றிய விபரங்களைக் கொண்ட அறிக்கை;

(x) உத்தியோகத்தர் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள்.

(11) புகையிரத ஆணைச்சீட்டு சம்பந்தமாக நடைமுறையிலிருக்கும் பொதுவான நிபந்தனைகள் ஐந்தினை விவரிக்குக.

அ) ஜனாதிபதியும், பிரதமரும் அவர்களது குடும்பத்தினரும், புகையிரதத்தில் பயணச் சீட்டு இன்றிப் பிரயாணம் செய்யமுடியும்.

ஆ) புகையிரதத்தில் இலவசமாக பிரயாணஞ் செய்ய உரித்துடையோருக்கு,  பொதுப்படிவம் 162 இல் புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படும்.

இ) புகைவண்டி ஆணைச்சீட்டினைப் பயணச் சீட்டாகப் பயன்படுத்த முடியாது,

ஈ) ஆணைச் சீட்டொன்றை வைத்திருக்கும் ஒருவர் கட்டணம் செலுத்தாது, பயணச் சீட்டைப் பெற முடியும்.

உ) அரசாங்க அலுவலர்களுக்கு, ஆணைச்சீட்டுக்கள் அவர்களின் திணைக்களத்
தலைவர்களினாலேயே வழங்கப்படும்.

ஊ) எனினும் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் ஒப்பமிடலாம்.

எ) ஆணைச்சீட்டில்  ஏதாவது விடயம் மாற்றம் செய்யப்பட்டால், அதனைச் செய்கின்ற உத்தியோகத்தர் அம்மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் தன் ஒப்பத்தையிட வேண்டும்.

ஏ) அனைத்து பயணச் சீட்டுக்கள்,  யாவும், பயணச் சீட்டுச் சேகரிப்பாளரால் பரீட்சிக்கப்படல் வேண்டும்.

(12) அரசாங்க உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறுகை சம்பந்தமான ஏற்பாடுகள் ஐந்தினைக் குறிப்பிடுக.

அ) அரசாங்க உத்தியோகத்தரொருவரின் ஓய்வுபெறுகை அரசாங்க, நீதிச் சேவை உத்தயோகத்தர் (ஓய்வுபெறுகை) கட்டளைச் சட்டத்தினாலும் அக்கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளினாலும் அமைச்சரவையின் கொள்கைத் தீர்மானங்களாலும் நெறிப்படுத்தப்படுகிறது.

ஆ) ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 14ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின் விசேட வகுதிகளுக்குள் வராத, அரசாங்க சேவையில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்த உத்தியோகத்தரொருவர் தமது தற்றுணிபின் பிரகாரம் ஓய்வுபெறலாம். ஆனால் அவர் 55 வயதைப் பூர்த்தி செய்யும் திகதியிலிருந்து மாத்திரமே ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

இ) அரசாங்க நீதிச்சேவை உத்தியோகத்தர் (ஓய்வுபெறுகை) கட்ளைச்சட்டத்துக்கு அமைய உத்தியோகத்தரொருவரின் விருப்ப ஓய்வுபெறுகை வயது 55 ஆண்டுகளாகவும் கட்டாய ஓய்வுபெறுகை வயது 60 ஆண்டுகளாகவும் இருத்தல் வேண்டும்.

ஈ) உத்தியோகத்தரொருவர் வருடாந்த சேவை நீடிப்பு இல்லாமல் 60 வயது வரை சேவையில் இருக்கலாம்.

உ) அரசாங்க உத்தியோகத்தரொருவர் 55 வயதைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் எந்நேரத்திலும் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்குக் கருதுமிடத்து அவர் ஓய்வுபெறுவதற்கான தனது விருப்பத்தை தான் ஓய்வுபெறக் கருதுகின்ற திகதிக்கு ஆகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராக நியமிப்புச் செய்யும் அதிகாரிக்கு முறைமையாக எழுத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

(13) அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிய நபர்களிடையேயிருந்து, அரசாங்க சேவையில் மீள வேலைக்கமர்த்தப்படுவதற்கு தகுதியற்றவர்கள் யாவர்?

கீழ்வரும் காரணமாக இளைப்பாற்றப்பட்டவர்கள் மீள சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்

(i)  கட்டாயமாக இளைப்பாற்றப்படல்,

(ii) ஒழுக்காற்றுக் காரணங்கள்

(iii) பொதுத்திறமை காரண்மாக

(iv) சேவை நீடிப்பு மறுக்கப்பட்டதன் விளைவாக

(v) அரசாங்க கொள்கைத் தீர்மானமொன்றின் பேரில் சம்மதத்துடன்

(vi)  ஆணைக்குழு விதிகளின் அட்டவணை I இல் அல்லது தாபனக்கோவை தொகுதி II இல் குறிப்பிடப்பட்ட ஏதாவது தவறுக்கு ஓய்வுபெற்ற தினத்திலிருந்து மூன்று ஆண்டுகள் முன்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர்

(vii) ஓ.பி.குறிப்பின் 12ஆம் பிரிவின் கீழ் ஓய்வுபெற்றவர்

(viii)  ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்  ஒருவர்.

நிதி நடைமுறைகள் – SLTS EB Exam

1) ‘திரட்டுநிதி’ என்றால் என்னவென்பதனை குறிப்பிடுக.

குறித்த நோக்கத்திற்கென வேறான நிதியில் போடப்படாத இலங்கைக்கு உரித்தான சகல பணத்தையும் கொண்டுள்ள நிதி திரட்டு நிதி எனப்படும்.

2) திரட்டு நிதியிலிருந்து செய்யப்படும் செலவினத்திற்கான ஏற்பாடுகளின் பிரதான வகுதிகள் இரண்டையும் குறிப்பிடுக.

அ) வழங்கல் சேவைகள்

ஆ) விசேட சட்ட சேவைகள்

3) எதிர்பாராத செலவு நிதியத்திலிருந்து முற்பணத்தினை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஏற்பாடுகளினைச் சுருக்கமாக விவரிக்குக.

(ஆ) எதிர்பாராச் செலவு நிதியத்திலிருந்து முற்பணம் ஒன்றைப் பெறு வதற்கான விண்ணப்பம் கீழ்வரும் சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்படும்.

(i) எதிர்பாராப் பின்னிகழ்ச்சிச் செலவினத்துக்கு பணம், ஏற்பாடு எதுவும் இல்லாத அவசர நேரத்தில் தேவைப் படும்போது ,

(ii) பொருத்தமில்லாத காரணத்தினால் அல்லது சேமிப்பு இல்லாத காரணத்தினால் வகைமாற்று மூலம் பணத்தைப்பெற்றுக் கொள்ள முடியாத போது ;

(iii) குறைநிரப்பு ஏற்பாட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு போதிய கால அவகாசம்
இல்லாமல் இருக்கும்போது ,

மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இ) இவ்விண்ணப்பத்திற்கமைய சனாதிபதியின்  சம்மதத்தைப் பெற்றதன் பின்னர் திறைசேரியானது நிதி அமைச்சரது கையொப்பத்தினைப் பெறுவதற்காக எதிர்பாராப் பின்னிகழ்ச்சி செலவு நிதிய முற்பண ஆணைப்பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்கும். இந்த அதிகாரம் திறைசேரியினால் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்படும். 

4) கருத்திட்டமொன்றின் திட்டமிடல் படிமுறைகளைக் குறிப்பிடுக.

அ) இனங்காணல்

ஆ) பூர்வாங்க மதிப்பீடு

இ) பூர்வாங்க அங்கீகாரம்

ஈ) தயாரித்தல்

உ) முழுமையான மதிப்பீடு

ஊ) இறுதி அங்கீகாரம்

எ) பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்தல்

ஏ) வரவு செலவுத்திட்டத்தில் சேர்த்தல் 

ஐ) செயற்படுத்தல்

ஒ) மதிப்பீடு செய்தல் 

5) ‘விரிவான பதவியணி’ அட்டவணையில் உள்ளடக்கப்படும் விடயங்களைக் குறிப்பிடுக,

ஒவ்வொரு கருத்திட்டத்தின் கீழ் தொகுதி ‘ஆ’ – பதவிநிலை அலுவலர்கள், தொகுதி ‘இ’ – உப நிலை அலுவலர்கள், தொகுதி ‘ஈ’ – சிறு தர அலுவலர்கள். ஆகியோர்கள் அடங்கிய ஆளணிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்குகிறது.

இவ்வட்டவணையில் கீழ்வரும் விடயங்கள் உள்ளடங்கும்.

(அ) அலுவலர்களின் தொகுதியும் பதவிகளும் ;

(ஆ) சம்பள அளவுத்திட்டம் ;

(இ) கடந்த வருடத்தின் இறுதியில் இருந்த நிரந்தர தற்காலிக அல்லது அமய அலுவலர்களது உண்மையான எண்ணிக்கை மற்றும் வருடத்தின் போது செலுத்திய மொத்த வேதனம் ;

(ஈ) நடப்பு வருடத்துகுரிய நிரந்தர/ தற்காலிக அல்லது அமய அலுவலர்களது மதிப்பீட்டு எண்ணிக்கையும் சம்பளமும்,

(உ) அடுத்த வருடத்துக்குரிய நிரந்தர தற்காலிக அலுவலர்களது மதிப்பீட்டு எண்ணிக்கையும் சம்பளமும்.

7) வருடாந்த செலவு மதிப்பீட்டினை தயாரிக்கின்ற கணக்கிட்டு உத்தியோகத்தரினால் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

(1) ஏற்கனவே உள்ள சேவைகள் அனைத்தும் மதிப்பீடுகளில் சேர்க்கப்படுவதையும் அவை நிதியாண்டின் போது தனது திணைக்களத்தின் திறனினுள் அமைவதையும் உறுதிப்படுத்தல்,

(ii) மதிப்பீடுகள் முழுமையாகவும் இயன்ற வரையிற் துல்லியமாகவும் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தல்

(ii) மதிப்பீடுகள் சிக்கனம், மற்றும் வினைத்திறனுடன் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தல்,

(iv) மதிப்பீடுகளுக்கான பூர்வாங்க முயற்சிகளில் தாமதம் எதுவும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தல்

(v) மதிப்பீடுகளில் ஏற்பாட்டைச் செய்வதற்கான அதிகாரம் ஏற்கனவே பெறப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல்

(vi) மதிப்பீடுகள் உரிய நேரத்தில் உரிய உருவில் அனுப்பிவைக்கப்படுவதை உறுதிப்படுத்தல்,

8) கணக்கீட்டு உத்தியோகத்தர் ஒருவரினால் வருமானம் தொடர்பிலான அதிகாரங்களினை கையளிக்கும் படிமுறைகளைக் குறிப்பிடுக.

அ) அதிகாரங்களை கையளிக்கும் ஒவ்வொரு அலுவலரையும் அவரின் பெயர் அல்லது பதவியினால் குறிப்பிட்டு  கையளிக்கப்பட்ட கடமைகளையும் குறிப்பிட்டு ஒரு பட்டோலையை கணக்கீட்டு உத்தியோகத்தர் தயாரித்தல் வேண்டும்.

ஆ) தனிப்பட்ட பெறுகைகளின் தொகை அல்லது தனிமையில் ஏதாவது கட்டுப்பாடு விதிக்கப் பட்டிருந்தால் அதுவும் குறிப்பிடப்படல் வேண்டும்.

இ) கடமைக்கு சமூகமளிக்காமலிருக்கும் பொழுது மாற்று ஒழுங்குகளும் அந்தப் பட்டோலையில் குறிப்பிடப்படல் வேண்டும்

ஈ) இப்பட்டோலை காலத்துக்கு காலம் மீள்பார்வையிடப்பட்டு நடைமுறைக்கு விடப்படல் வேண்டும்.

உ) பணம் பெறுதலுடன் தொடர்பான கையளிப்புக்களின் பிரதிகள் ஒவ்வொரு மதிப்பீட்டு அலுவலர். சேகரிக்கும் அலுவலர், ஏற்கும் அலுவலர் ஆகியோருக்குக் வழங்கப்படல் வேண்டும்.

ஊ) ஒரு பிரதி கணக்காய்வாளர் அதிபதிக்கும்  அனுப்பப்படல் வேண்டும்.

9) பிரதான கணக்கிட்டு உத்தியோகத்தருக்கும் கணக்கிட்டு உத்தியோகத்தருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளினை விளக்குக.


10) வருமான கணக்கிட்டு உத்தியோகத்தர் அரச வருமானம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய விடயங்கள் ஆறினைக் குறிப்பிடுக.

01. தனக்கு பொறுப்பளிக்கப்பட்ட வருமானத் தலைப்பு, உபதலைப்பு, விடயம். (Item) உபவிடயம் (Sub Item) என்பவற்றிற்குரிய மதிப்பீட்டை முழுமையாகவும் முடிந்தளவு சரியாகவும் தயாரித்தல்.

02. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வருமானக்கணக்கைத் தயாரித்தல்

03. வருமான நிலுவை தொடர்பான ஜூன் 30, டிசம்பர் 31 ஆகிய திகதிகளுக்கான அறிக்கைகளை பிரதிவருடமும் ஜூலை 31, ஜனவரி 31 ஆகிய திகதிகளுக்கு முன்பாக திறைசேரிக்கு அனுப்பி வைத்தல்.

04. உத்தியோகத்தர்களால் அனுப்பப்பட்ட வருமான சேகரிப்பு அறிக்கைகளை மதிப்பீட்டிலும், வருமானக்கணக்கிலும் உள்ளடக்குதல்.

05. சம்பந்தப்பட்ட கணக்கீட்டு உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து நிலுவையாகவுள்ள வருமானத்தை விரைவாகச் சேகரிப்பதற்கு விசேட ஒழுங்குகளை மேற்கொள்ளல்

06. கணக்கீட்டு உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து வருமானச் சேகரிப்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தல்,

07. சேகரிப்புக்களை தலைப்பு, உபதலைப்பு, விடயம் உபவிடயம். வாரியாகப் பதிவேடுகளில் பதிதல்,

08. சேகரிப்பாளர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒப்பீடு செய்தல்.

09. பொருத்தமான திணைக்களங்களிலிருந்து வருமான நிலுவை அறவீடு தொடர்பான அரையாண்டு அறிக்கைகளை தொடர்ந்து ஜூலை 15, ஜனவரி 15ற்கு முன் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

09. பொருளாதாரம், மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தேவையானவிடத்து காலத்துக்குக் காலம் கட்டணங்கள், வரிகள், விலை என்பவற்றை மீளாய்வு செய்து திருத்தியமைத்தல்,

11) உள்ளகக் கணக்காய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கான நோக்கத்தினை சுருக்கமாகக் குறிப்பிடுக.

அ) திணைக்களத்தின் நிதிச்செயற்பாடுகள் மீதான மோசடிகள், வழுக்கள் என்பவற்றை அகக்கட்டுப்பாட்டின் மூலம் கண்டுபிடிப்பதற்கும், தடுப்பதற்கும், 

ஆ) அபிவிருத்தி வேலைகள் கருத்திட்டங்கள் என்பன தொடர்பிலான முன்னேற்றக்குழு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கும் உதவும் வகையிலும்,

இ) இவர்களை திணைக்களத்தலைவருடன் இணைப்பதற்கும்

உள்ளகக்கணக்காய்வு ஸ்தாபிக்கப்படுகிறது. 

12) வருமானத்தினை சேகரிக்கும் உத்தியோகத்தர் ஒருவரினால் உரிய கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கள் ஏழினைக் குறிப்பிடுக.

அ) கட்டணங்கள் முழுமையாக அறவிடப்படாத விடத்து பணம். முத்திரை, ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தப்படின் அத்தொகை தேறும் (Realize) வரை அனுமதிப்பத்திரம், உத்தரவுப்பத்திரம், போன்றவை வழங்கப்படாதிருத்தல்

(ஆ) அரசுக்குச் சேரவேண்டிய வருமானம் தொடர்பான. சேகரிக்கப்பட்ட தொகை, செலுத்தப்படாதிருக்கும் நிலுவையாக உள்ள தொகை என்பவற்றைக் காட்டத்தக்கவாறு பதிவேடுகளை வைத்திருத்தல். (வருமானவரி Income Tax, நீர்ப்பாசன வீதவரி Water Supply Tax, மேட்டார் வாகன அனுமதிப்பத்திரம் Motor Vehicle License போன்ற கிரமமான சேகரிப்பு)

(இ) சேகரிப்பு முன்னேற்றத்தைக்காட்டும் அறிக்கைகள் கூற்றுக்கள் என்பவற்றைக் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு கிரமமாக அனுப்பி வைத்தல்,

(ஈ) கிடைக்கும் பணத்திற்கு உரிய படிவத்தில் பற்றுச்சீட்டினை வழங்கல்.

(உ) கிடைக்கப்பெறும் தொகையை உடனடியாகவும், முறையாகவும் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டைப் பெறல்.

(உ) நிலுவைகளை அறவிட விசேட நடவடிக்கை எடுத்தல்

(எ) அறவிட முடியாத வருமதி தொடர்பாக விட்டுவிடுதல் கட்டளையைப்பெற உடனடி நடவடிக்கையை எடுத்தல்.

13) கணக்கு வைத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்களிலும் திருப்திகரமான நிதிக்கட்டுப்பாட்டு முறைமையை பேணுவது தொடர்பாக திறைசேரியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஐந்தைக் குறிப்பிடுக.

01. ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் என்ற வகையில் பெறப்படும் பணம் அனைத்தையும் உடனடியாகவும் சரியாகவும் கணக்குக்குக் கொண்டு வருதல்.

02. கொடுப்பனவு செய்யும் அலுவலகம் என்ற வகையில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை உடனடியாகவும் சரியாகவும் கணக்குக்குக் கொண்டு வருதல்.

03. இலங்கைக்கு வெளியே கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்தல்

04. ஏனைய அரசாங்கங்கள், அல்லது நிறுவனங்கள் சார்பாக சில கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.

05. வருடாந்த மதிப்பீட்டை திட்டமிடலும் தயாரித்தலும்

06. ஏனைய அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கணக்குகளை வகைப்படுத்தி பதிவேடுகளில் பேணுதல்.

07. திறைசேரியினால் கட்டுப்படுத்தப்படும் திரட்டு நிதி, ஏனைய நிதிகள், கணக்குகள் என்பவற்றை செயற்படுத்துதல்,

08. தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பலவகையான அரச நிதிகளுக்குமான கணக்குகளை பேணலும் வருடாந்த கணக்கைப் பிரசுரித்தலும்.

09. பொதுக்கணக்குக் குழுவினது அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை எடுத்தல்.

14) நிதி நிர்வாகம் தொடர்பில் அமைச்சு செயலாளர்களினால் நிதி அமைச்சருக்கு பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

15) செலவினங்கள் தொடர்பிலான அதிகாரங்களினை கையளித்தல் சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.

16) உறுதிச்சீட்டுக்களினை அத்தாட்சிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் அத்தாட்சிப்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களினை சுருக்கமாக விளக்குக.

17) பின்வருவனவற்றிற்கு  சிறுகுறிப்பு எழுதுக.

(i) வகைமாற்ற நடைமுறை

(ii) விசேட சட்டசேவை நிதியம்

(iii) வரவு செலவுத்திட்ட வகுப்பீட்டு அலகுகள்

(iv) காணி கட்டிடங்கள் கொள்வனவு

(v) திட்டமிடல் கூறு

No comments:

Post a Comment