அரசாங்க உத்தியோகத்தர்களின் நலன்புரி சங்கத்தின் பதவிக்காக விடுவித்தல் Released for the post of a Welfare Association of Public Officers
பல்தேர்வு வினாக்கள் தொடர் 01
ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. பொருத்தமான விடையினை தெரிவு செய்க.
01) அரசாங்க உத்தியோகத்தர்களை அவர்களின் நலன்புரி சங்கங்களுக்கு ( Welfare Association) விடுவிப்பது தாபன விதிக்கோவையின் எத்தனையாம் அத்தியாயத்தின் கீழ்?
1) அத்தியாயம் XXXII
2) அத்தியாயம் XXXIII
3) அத்தியாயம் XXXIV
4) அத்தியாயம் XXXV
02) அரசாங்க உத்தியோகத்தர்களின் நலன்புரி சங்கம் ஒன்றின் செயலாளர்/ பொருளாளர் பதவிக்காக அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரை விடுவிக்க வேண்டுமாயின் பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் தாபிக்கப்பட்ட நலன்புரி சங்கம் கொண்டிருக்க வேண்டிய அங்கத்தினர்களின் (Member) எண்ணிக்கை,
1) 500 இற்கு மேல்
2) 1000 இற்கு மேல்,
3) 1500 இற்கு மேல்,
4) 2000 இற்கு மேல்
03) நலன்புரி சங்கம் ஒன்றிற்கு விடுவிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு சங்கத்தின் மூலம் கொடுப்பனவு செய்யப்படுகின்ற படி(Allowance)
1) அவர்களின் ஒருங்கிணைந்த சம்பளத்தில் 25% தினை விஞ்சக் கூடாது.
2) அவர்களின் ஒருங்கிணைந்த சம்பளத்தில் 20% தினை விஞ்சக் கூடாது.
3) அவர்களின் ஒருங்கிணைந்த சம்பளத்தில் 15% தினை விஞ்சக் கூடாது.
4) அவர்களின் ஒருங்கிணைந்த சம்பளத்தில் 10% தினை விஞ்சக் கூடாது.
04) நலன்புரி சங்கம் ஒன்றிற்கு விடுவிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு
1) சம்பளமற்ற லீவு மாத்திரம் பெற்றுக் கொள்ளும் உரிமையுண்டு,
2) கடமை லீவு மாத்திரம் பெற்றுக் கொள்ளும் உரிமையுண்டு,
3) எந்தவொரு லீவுகளும் பெற்றுக்கொள்ளும் உரிமையில்லை,
4) லீவுகள் பெற்றுக்கொள்ளும் உரிமையுண்டு.
5) நலன்புரி சங்கம் ஒன்றிற்கு விடுவிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்காக குறித்த சங்கம் செலுத்த வேண்டிய ஓய்வூதிய சம்பளப் பங்களிப்புத் தொகை
1) உத்தியோகத்தரின் ஒருங்கிணைந்த சம்பளத்திலிருந்து 10% திற்கு சமமான ஓய்வூதிய சம்பளப் பங்களிப்புத் தொகை
2) உத்தியோகத்தரின் ஒருங்கிணைந்த சம்பளத்திலிருந்து 15% திற்கு சமமான ஓய்வூதிய சம்பளப் பங்களிப்புத் தொகை,
3) உத்தியோகத்தரின் ஒருங்கிணைந்த சம்பளத்திலிருந்து 20% திற்கு சமமான ஓய்வூதிய சம்பளப் பங்களிப்புத் தொகை,
4) உத்தியோகத்தரின் ஒருங்கிணைந்த சம்பளத்திலிருந்து 25% திற்கு சமமான ஓய்வூதிய சம்பளப் பங்களிப்புத் தொகை,
6) ஓய்வூதியச் சம்பளப் பிரமாணக் குறிப்பின் 24ஆம் பிரிவிற்கு அமைய உத்தியோகத்தர் ஒருவர் சங்கமொன்றிற்கு சேவைக்காக விடுவிக்கப்பட முடிவது,
1) 1 ஆண்டினை விஞ்சாத ஒரு காலப்பகுதிக்கு,
2) 2 ஆண்டுகளை விஞ்சாத ஒரு காலப்பகுதிக்கு,
3) 3 ஆண்டுகளை விஞ்சாத ஒரு காலப்பகுதிக்கு,
4) 4 ஆண்டுகளை விஞ்சாத ஒரு காலப்பகுதிக்கு,
7) சட்டமா அதிபரின் மதியுரைகள் அல்லது ஆலோசனைகள் தொடர்பான விடயம் தாபன விதிக்கோவையின் அத்தியாயம்,
1) அத்தியாயம் XXXII
2) அத்தியாயம் XXXIII
3) அத்தியாயம் XXXIV
4) அத்தியாயம் XXXV
8) சட்டமா அதிபரிடம் ஆலோசனைகளைக் கோர முடியாத விடயம்
1) தீர்மானமொன்றினை எடுப்பதற்காக உண்மையிலேயே எழுந்துள்ள பிரச்சினைக்குரிய விடயம் தொடர்பாக
2) அரச நிதி தொடர்பான விடயங்களில்
3) அரச நிர்வாகம் தொடர்பான விடயங்களில்
4) கருதுகோளான விடயங்களில்
9) வருமான வரிகள் (Income Tax), பிற வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் (Custom Tax) என்பவற்றிலிருந்து விலக்களித்தலோடு தொடர்புற்ற ஒப்பந்தமொன்றின், வரைபொன்று அங்கீகாரத்துக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது அங்கீகரிக்கப்பட வேண்டியது,
1) உரிய அமைச்சினால்,
2) உரிய அமைச்சின் செயலாளரினால்,
3) நிதி, திட்டமிடல் அமைச்சின் செயலாளரினால்,
4) அமைச்சரவையினால்,
10) அரசாங்கத்தின் சட்டவாக்க நிகழ்ச்சித் திட்டத்தையும் அச் சட்டங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முன்னுரிமை ஒழுங்கையும் அமைச்சரவை தீர்மானித்ததன் பின்னர், அமைச்சரவையின் முடிவுகளை ஒவ்வொரு செயலாளருக்கும் அறிவிப்பவர்.
1) அமைச்சரவைச் செயலாளர்
2) அமைச்சின் செயலாளர்,
3) உரிய அமைச்சர்,
4) நிதி அமைச்சர்,
11) ஏதேனும் நியதிச் சட்டமொன்றை வரையுமாறு சட்ட வரைஞரைக் கோர முடியாத சந்தர்ப்பம்,
1) அந்நியதிச் சட்டம் உத்தேச நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் போது,
2) அத்தியாவசிய நிலைமை காரணமாக அக்கோரிக்கையை சனாதிபதியவர்கள் அங்கீகரிக்காத போது,
3) அமைச்சரவை தீர்மானிக்க வேண்டிய எந்தவொரு கொள்கை ரீதியான பிரச்சினையோடும் தொடர்புபடாத திருத்தமொன்று ஏதேனுமொரு கட்டளைச் சட்டத்திற்கு அல்லது நியதிச் சட்டத்திற்குக் கொண்டு வரப்படுவது அச்சட்டத்தின் குறிக்கோளாக இருக்கும் போது,
4) வரைபு மசோதா சார் வேண்டுகோள் யாவும் நீதி அமைச்சின் செயலாளரூடாக, அவ்வேண்டுகோளை விடுக்கின்ற அமைச்சின் செயலாளரால், சட்டவரைஞருக்கு அனுப்பப்படும் போது,
12) தாபன விதிக்கோவையின் நோக்கங்களுக்காக ஒழுங்கு விதியொன்றை, பிரமாணமொன்றை, பிரகடனமொன்றை, கட்டளையொன்றை மற்றும் சட்டவதிகாரம் கொண்ட அறிவித்தலொன்றை உள்ளடக்கியிருக்கும் சட்டம்,
1) இணைந்த சட்டம்,
2) முதன்மை சட்டம்,
3) துணைச் சட்டம்,
4) உப சட்டம்,
13) அமைச்சொன்றிற்கு தேவைப்படுகின்ற ஏதேனும் துணைச் சட்டமொன்றின் வரைவு தயாரிக்கப்பட வேண்டியது,
1) அந்த அமைச்சினால்
2) அமைச்சரவையினால்,
3) சட்டமா அதிபரினால்,
4) அரசாங்க சேவை ஆணைக்குழுவினால்
14) உள்ளூராட்சி சபையொன்றிற்குரிய துணைச் சட்டமொன்றை மீளாய்வு செய்யுமாறு சட்டவரைஞரிடம் கோர வேண்டியவிடத்து, அவ்வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டியது,
1) உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால்,
2) உள்ளூராட்சி ஆணையாளரினால்,
3) ஆளுனரினால்
4) உரிய அமைச்சின் செயலாளரினால்
15) திணைக்களத் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் வழக்கொன்றை தொடுக்க உத்தேசிக்குமிடத்து அவர் விண்ணப்பம் செய்ய வேண்டியது,
1) சட்டமா அதிபருக்கு
2) அமைச்சின் செயலாளருக்கு
3) அமைச்சரவைக்கு,
4) அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு,
16) அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளமை காரணமாகச் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நேரமில்லாதவிடத்து, தனது மாவட்டத்திலுள்ள வழக்கறிஞரொருவரின் சேவையை மாவட்ட செயலாளருக்கு பெறக்கூடிய நிபந்தனை அல்லாதது,
1) அவ்வழக்கறிஞரின் கட்டணத்தை செலுத்துவதற்குத் தேவையான நிதி காணப்படல்,
2) எந்த வழக்கு சம்பந்தமாக அவ்வழக்கறிஞரின் சேவையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவ்வழக்கு அரசாங்கத்தோடு நேரடியான தொடர்பு கொண்டதாக இருத்தல்,
3) அது, சட்டமா அதிபரை ஒரு திறத்தவராகக் கொள்ளாத ஒன்றாகவிருத்தல்,
4) தனக்கு வருவானமொன்றைத் தருகின்ற அரச சார்புள்ள நிறுவனம் ஒன்றினால் அந்நிறுவனத்தின் செலவில் நிரூபிக்கப்பட வேண்டிய வழக்கொன்றாக இருத்தல்.
17) திணைக்களத்தலைவர் குற்றவியல் வழக்கொன்றைத் தொடுப்பதற்கு முன்னர், அரசாங்கத்தின் அனுமதி வேண்டப்படுமிடத்து அதற்கான கோரிக்கை,
1) சட்டமா அதிபரூடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்,
2) செயலாளரூடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
3) அமைச்சரூடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
4) அமைச்சரவை ஊடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
18) ஏதேனுமொரு திணைக்களத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் நீதவான் ஒருவர் எதிராளி குற்றமற்றவர் என வழங்கியுள்ள தீர்ப்பு பிழையானதென அத்திணைக்களம் கருதுமிடத்து, அதுபற்றி திணைக்களத் தலைவர் உடனடியாக அறிவிக்க வேண்டியது,
1) செயலாளருக்கு
2) அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு
3) சட்டமா அதிபருக்கு
4) ஒழுக்காற்று அதிகாரிக்கு
19) திணைக்களத் தலைவரல்லாத ஓர் உத்தியோகத்தர், அவரின் பதவி நிலையில் ஒருசெயல் தொடர்பிலான சிவில் வழக்கொன்றுக்காக அறிவித்தலொன்றைப் பெறுவாராயின், அவர் உடனடியாக அது பற்றி தெரிவிக்க வேண்டியது,
1) தனது திணைக்களத் தலைவருக்கு
2) உரிய அமைச்சின் செயலாளருக்கு
3) அமைச்சரவைக்கு
4) சட்டமா அதிபருக்கு
20) திணைக்களத் தலைவர் ஒருவருக்கான வழக்கின் எதிர்வாதத்தைத் தான் மேற்கொள்ள வேண்டியதில்லையெனச் சட்டமா அதிபர் அபிப்பிராயப்படுவாரெனில், குறித்த ஆவணங்களை தனது அபிப்பிராயத்துக்குரிய காரணங்களுடன், அனுப்பி வைக்க வேண்டியது,
1) திணைக்களத் தலைவரின் அமைச்சுக்கு
2) நீதி அமைச்சருக்கு
3) மேல் நீதிமன்றுக்கு
4) திணைக்களத் தலைவருக்கு,
21) அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைகளை ஆற்றுகையில் எழுந்த விடயமொன்று தொடர்பாக தனது தனிப்பட்ட நிலையில் வழக்குகளைத் தொடுக்க முன்னங்கீகாரம் பெற வேண்டியது,
1) செயலாளரிடம்,
2) திணைக்களத் தலைவரிடம்,
3) சட்டமா அதிபரிடம்
4) அமைச்சரிடம்,
No comments:
Post a Comment