Sunday, November 7, 2021

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் III EB Past Paper

அரசாங்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை

Efficiency Bar Examination  for Officers in Class III of Public Management Service Officer Service – 2008 (I) (2009)

Past Paper

கடந்தகால வினாப்பத்திர வினாக்கள்  விடைகளுடன்

Financial Regulation



அரச நிதி நடைமுறைகள்

1) உத்தியோக பூர்வ வங்கிக் கணக்கு ஒன்றைப் பராமரிக்கும் ஒவ்வொரு அரச நிறுவனமும் மாதாந்தம் வங்கிக் கணக்கிணக்கக் கூற்றினைத் Bank Reconciliation தயாரிக்க வேண்டும்.

(i) இதனது தேவைப்பாடு யாது ?

திணைக்களத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்ட காசோலைகளுள் (Cheque) சில வங்கி கூற்று (Bank Statement)  வழங்கப்படும் தேதிக்கு முன்னர் பணம் பெறுதற்காக வாங்கியில் சமர்ப்பிக்கப்படாதிருந்தால் வங்கிக் கூற்றுக் களிலும் உள்ள மீதி திணைக்களத்தின் காசேட்டு மீதியுடன் (cash Book Balance) வேறுபடும்.

அதேபோன்று, திணைக்களத்தினால் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட காசோலைகள், காசுக் கட்டளைகள் (money orders) முதலியன வங்கிக்கூற்று வழங்கப்பட்ட தேதிக்கு முன்னதாகத் தேறாதிருக்கலாம். இதன் காரணமாக திணைக்களக் காசேட்டின் மீதியை வங்கிக் கூற்றில் காட்டப்பட்டுள்ள மீதியுடன் சமப்படும் வகையில் வங்கிக் கணக்கினக்கக் கூற்று  (Reconciliation) தயாரிக்கப்பட வேண்டும்.

கணக்காய்வு பரிசோதனைகளுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. 

(ii) வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்காக கொடுப்பனவு செய்யப்படாத காசோலைப் பதிவுப் புத்தகத்திலிருந்து பெறப்படும் உதவி யாது ?

குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கு வங்கிக்கணக்கிணங்கக் கூற்று தயாரிக்கும்போது குறிப்பிட்ட மாதத்தில் கொடுப்பனவு செய்யப்படாத காசோலைகளின் தொகைகளின் மொத்தப்பெறுமதி தேவைப்படுவதால் அதற்கான தொகையை கொடுப்பனவு செய்யப்படாத காசோலைகளின் பதிவேட்டிலிருந்து பெறமுடிகிறது. 

(iii) வங்கியினால் காசோலை ஒன்று மறுக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை யாது ?

நி. ஒ. 189 இன்படி  கீழ்க்காணும் வகையில் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும்,

அ) மறுக்கப்பட்ட காசோலையை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்,

ஆ) அக்காசோலைக்குரிய  கொடுப்பனவு, மற்றும் சேவையை நிறுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட  உத்தியோகத்தர்களுக்கு காசோலை மறுக்கப்பட்டுள்ள விடயத்தை தெரிவிக்க வேண்டும் ;

இ) ஏற்கனவே  வழங்கப்பட்ட பொருளைத் திருப்பிப் பெறுவதற்கும் மேலும் சேவைகள் வழங்கப் படுவதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

ஈ) காசோலையினை எழுதி அனுப்பியவரிடம் விளக்கத்தைக் கோர வேண்டும்,

உ) அவரின் விளக்கத்துடன் குறித்த விடயத்தைத் திறைசேரிக்கு அறிவிக்க வேண்டும்.

ஊ) திறைசேரியின் பதில் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவரிடமிருந்து வேறு எந்த காசோலைகளையும் ஏற்றுக்கொள்ளா திருத்தல் வேண்டும்,

எ) புதிதாகப்பணம் செலுத்துமாறு கோரவேண்டும்,

ஏ) மற்றும் 486ம் நி.ஒ விதியில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டு நடைமுறையைக் கையாள வேண்டும்.

2) உறுதிசெய்யப்பட்ட பண உறுதிச்சீட்டு ஒன்றுக்குப் பணம் கொடுப்பனவு செய்யும் உத்தியோகத்தரால் பணம் கொடுப்பனவு செய்ய முன்னதாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய பத்து விடயங்களைக் குறிப்பிடுக.

அ) கொடுப்பனவுக்கான ஒவ்வொரு உறுதிச்சீட்டும் (Voucher) அத்தாட்சிப்படுத்துவதற்கென அதிகாரம் பெற்றுள்ள ஓர் உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல்,

ஆ) உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னர்  அவ்வுறுதிச்சீட்டு தவறாகப் பயன்படுத்தப்படவில்லையென உறுதிப்படுத்தல்,

இ) கொடுப்பனவு செய்யமுன்னர் தனது விசேட கவனத்திற்குட்பட்ட விடயங்கள் யாவும் முறையே கணக்கிடப்படுதல் ,

ஈ) ஒவ்வொரு கொடுப்பனவின் போதும் முறையான பற்றுச்சீட்டுக்கள் பெறப்படுதல்,

உ) காசு பெறுபவரின் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்படல்

ஊ) காசோலை, வங்கிக்கட்டளை, காசுக்கட்டளை ஆகியனவற்றினால் கொடுப்பனவு செய்யும்போது காசோலையில், வங்கிக் கட்டளையில் அல்லது காசுக்கட்டளையில் விண்ணப்பத்தில் உள்ளவாறு பெயரும் பிற விபரங்களும் உறுதிச்சீட்டு தகவலுடன் ஒத்துப்போகின்றனவென உறுதிப்படுத்தல்,

எ) உறுதிச் சீட்டில் காட்டப்பட்டுள்ள தொகை  வழங்கப்பட்டுள்ளதென உறுதிச் சீட்டில்  “செலுத்தப்பட்டுள்ளது” எனும் பதம் பொறிக்கப்பட்டுக் கையொப்பமிடுதல்,

ஏ) ஒவ்வொரு கொடுப்பனவும் பொருத்தமான பதிவுகளில் பதியப்பட்டு முறையாகக் கணக்கு வைக்கப்பட்டுள்ளதென உறுதிப்படுத்திக்கொள்ளல்,

ஐ) காசு அவரிடம் ஒப்படைக்கப்படும்போது அது களவு போகாமல் அல்லது காணாமற் போகாமல் அதற்கு முறையான முற்காப்புச் செய்யப்படுகினறதென உறுதிப்படுத்தல்,

ஒ) காசோலையாகக் கொடுப்பனவு செய்யும்போது வங்கி மீதி சரிபார்க்கப்படல் வேண்டும். 

3. களஞ்சியக் காப்பாளர் மற்றும் களஞ்சிய உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் வரையறை செய்து அவர்கள் ஒவ்வொருவரது கடமைகளையும் எடுத்துக் கூறுக.


4. சிறுகுறிப்புகள் எழுதுக.

(1) ஒதுக்கீட்டுச் சட்டம் 

திணைக்களத்தின் கணக்கீட்டு உத்தியோகத்தர் வரைபு மதிப்பீடுகளை (Draft Estimate)  தயாரித்து பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு சமர்ப்பிப்பார். பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் நி.பி 50க்கு அமைவாக வரைபு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா என பரிசீலனை செய்து தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளருக்கு  சமர்ப்பிப்பார்.

திறைசேரி வரைபு மதிப்பீடுகளை அங்கீகாரம் பெறும்பொருட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும், அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் அரசாங்க அழுத்தகருக்கு அச்சிடுவத்காக அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நிதியமைச்சர் அதனை ஒதுக்கீட்டு சட்டமூலத்துடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார்.

பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்திற்கு பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்படுமிடத்து அரசியலமைப்பு 80(1) பிரிவின்படி சபாநாயகரின் சான்றிதழ் இடப்பட்டபின் ஒதுக்கீட்டுச்சட்டமாக மாறும். 

இது ஒதுக்கீட்டு சட்டம் எனப்படும். 

(ii) பெட்டிக் காறுக் கட்டுநிதி

இது சில்லறைப் பண உப கட்டுநிதி எனவும் குறிப்பிடப்படும். இது சாதாரணமாக 100.00 ரூபாவிற்கு மேற் படலாகாது. எனினும். பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஒருவர் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவரின் மேற் பார்வையின் கீழ் கடமையாற்றும் எந்தவொரு அலுவலருக்கும் ஆகக்கூடியது ரூபா 5,000.00 வரையான தொகைக்கு தனது தற்றுணியின் பேரில் அதிகாரம் அளிக்கலாம். 

(ii) வங்கி மேலதிகப் பற்று 

காசோலை மூலம் கொடுப்பனவுகள் மேற்கொள்ளும் போது வங்கியில் நிலுவை போதாத நிலை ஏற்படுமாயின் வங்கியானது மேலதிகப்பற்றுக்களை வழங்குகின்றது. இது குறிப்பிட்ட அதே மாதத்தில் தீர்க்கப்பட வேண்டும். 

எனினும் நிதி ஒழுங்கு விதிகள் 387 இன்படி, ஒரு அரசாங்க திணைக்களத்துக்கு வங்கி மேலதிகப் பற்றுக்கள் தடுக்கப்பட்டுள்ளன. காசோலை மூலம் செய்யப்படும் சகல கொடுப்பனவுகளுக்கும் வங்கி மீதி உள்ளதாவெனக் கொடுப்பனவு உத்தியோகத்தர்  உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

(iv) திரட்டு நிதியம் 

குறித்த நோக்கத்திற்கென வேறான நிதியில் போடப்படாத இலங்கைக்கு சொந்தமான சகல பணத்தையும் கொண்டுள்ள நிதியம் திரட்டு நிதியம் எனப்படும். 

(v) குறைநிரப்பு மதிப்பீடு

எதிர்பாராத சூழ்நிலைகளில் செலவினம் ஒன்றை செய்ய வேண்டிய தேவை திணைக்களத் தலைவர் ஒருவருக்கு எழுகிறது.

இதன் போது அவர், சேவையின் தன்மை, அளவு ஆகியவற்றையும் அதன் மீதான மொத்தச் செலவையும், தேவையான மேலதிக நிதி ஏற்பாட்டுத் தொகையையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை உரிய அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

செயலாளர் அவ்வறிக்கையை தனது கருத்துக்களுடன் உரிய அமைச்சரிடம் சமர்ப்பிப்பார்.  அமைச்சர் அந்த நோக்கத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவார்.

அதன் பின்னர்  பாராளுமன்றத்திற் சமர்ப்பித்து தீர்மானம் பெறப்படும்.

இதற்கு 

(i) மேலதிக நிதி ஏற்பாடு மேலதிகச் செலவினத்தின் முழு அளவுக்கும் தேவையா,

(ii) மேலதிகச் செலவின் ஒரு பகுதியை சேமிப்புகளிலிருந்து ஈடு செய்ய முடியுமா ,

எனும் விடயங்கள் திணைக்களத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திணைக்களத் தலைவர் வகைமாற்று நடைமுறையின்  சேமிப்புகள் எவையேனும் உண்டா என்பதையும் இதன்போது அறிவிக்க வேண்டும். 

குறைநிரப்பு மதிப்பீடு ஒன்றின் தேறிய தொகையானது, தேவையான மேலதிக நிதி ஏற்பாட்டுத் தொகையிலிருந்து மாற்றுவதற்குள்ள சேமிப்புகள் (Savings) கழித்து வரும் தொகையாகும்.

No comments:

Post a Comment