Saturday, November 6, 2021

MSO I Promotion Exam Past Paper வினாக்கள் விடைகளுடன்

தரம் II முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை (MSO) தரம் I இற்கு பதவியுயர்த்துவதற்கான பரீட்சை 2000 மார்ச்

Promotion Exam Past Paper – Management Service officer Grade II to Grade I

கடந்தகால வினாப்பத்திர வினாக்களுக்கான விடைகள்

தாபன விதிகள்




1) பின்வருவனபற்றிச் சுருக்கக் குறிப்புகள் எழுதுக.

(i) அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரை மறுபடியும் சேவைக்குச் சேர்த்துக்கொள்ளல்

1. மீள சேர்த்துக்கொள்வதற்கு அமைச்சரவையின் முன் அங்கீகாரம் பெறப்படுதல் வேண்டும்.

2. தற்பொழுது அறுபது (60) வயதினைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர்  இளைப்பாறிய ஒருவரை மீள சேர்த்துக் கொள்வதற்கு விசேட காரணங்கள் உள்ளமை பற்றி அமைச்சரவை திருப்தியடைந்தால் மாத்திரமே அவர் மீள சேர்த்துக் கொள்ளப்படுவார்.

3. மருத்துவக் காரணங்களுக்காக இளைப்பாறுகை வழங்கப்பட்ட  ஒருவர் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு அமைய நியமன அதிகாரியினால் மீள சேர்க்கப்படலாம்.

3:1 அவர் இளைப்பாற்றப்பட்ட  நேரத்தில் ஐம்பது (50) வயது பூர்த்தியடையாதவராக இருத்தல்,

3:2 அவர் இளைப்பாறி ஒரு வருடமாவது கடந்திருத்தல்,

3:3 அவர் இளைப்பாற முன்பு வேலையும் நடத்தையும் திருப்திகரமாக அமைந்திருத்தல்,  

3:4 பொருத்தமான மருத்துவ சபை ஒன்றினால் அவரது உடல்நிலை கடமைக்குத் தகுதியான நிலையில் உள்ளதாக  சான்றுப்படுத்தப்பட்டிருத்தல்,

3:5 நரம்புக் கோளாறு அல்லது உள நோய் காரணமாக இளைப்பாற்றப் பட்டிருந்தால் செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

4. இவ்வாறானவர்களின் சம்பளம் VII ஆம் அத்தியாயத்தின் 8 ஆம் பிரிவின் படி வழங்கப்படல் வேண்டும்.

(ii) அரசாங்க சேவையில் அல்லது அரசாங்கக் கூட்டுத்தாபனத்தில் தொழில் அளிக்கும் போது முன்னைநாட் படைச்சேவையாளருக்கு அளிக்கப்படும் சலுகை

தாபன விதிக்கோவையின் படி “முன்னாள் படைச் சேவையாளர்” என்பது ஓய்வுபெற்ற அல்லது தனது சொந்தச் சேவைக்காலத்தை பூர்த்தி செய்த அல்லது ஆயுதப்படை சேவையிலிருந்து விலகிய உத்தியோகத்தர் ஒருவர் என கருதப்பகிறது. 

தொழில் வழங்கும்போது அளிக்கப்படும் சலுகைகள் பின்வருமாறு.

(அ) வயது – முன்னை நாள் படைச் சேவையாளர் ஒருவரின் வயதிலிருந்து அவர் நிரந்தரப் படையணியில் சேவையாற்றிய காலப்பகுதியை கழிக்கும்போது விண்ணப்பிக்கின்ற பதவிக்குரிய ஆகக்கூடிய வயதெல்லைக்குள் அமையுமாயின்  அவ்வாறு மேற்கொள்ளல்,

(ஆ) கல்வித் தகைமைகள்: பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மிகக்குறைந்த கல்வித் தகைமையிலும் பார்க்க அடுத்த குறைவான  நிலைக்குக் கணித்தல்;

(இ) தொழினுட்பத் தகைமைகள் –  ஆயுதப்படையில் தொழிநுட்பப் பிரிவுகளில் கடமையாற்றிய காலத்தில் பெற்றுக் கொண்ட தேர்ச்சி மற்றும் அனுபவத்தை கவனத்திற் கொள்ளுதல்.

(ஈ) சம்பளம் – தாபன விதிக்கோவையின்  VII ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் பொருத்தமானதாகும்.

(iii) அரசாங்க சேவைக்கு நியமித்தல் தொடர்பான தகுதியின்மைகள்

அ) பொதுத் திறமையின்மைக்காக கட்டாயமாக ஓய்வுபெறுவிக்கப்படல்,

ஆ) பதவிநீக்கத்திற்கு ஓர் கருணை மாற்றுவழியாக ஓய்வுபெறுவிக்கப்படல்,

இ) ஒரு தண்டனையாக ஓய்வுபெறுவிக்கப்படல்,

ஈ) முறைமையான ஒழுக்காற்று விசாரணைக்குப் பின்னர் பதவி நீக்கஞ்செய்யப்படல்,

உ) தமது பதவியை வெற்று வெறிதாக்கிய ஒருவர்

ஊ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கு எதிராக புரிந்த குற்றவியல் தவறொன்றின் காரணமாக சட்ட நீதிமன்றமொன்றினால் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருத்தல், 

எ) ஏதாவது குற்றவியல் நடவடிக்கை முறையில் சட்ட நீதிமன்றம் ஒன்றினால் குற்றத்தீர்ப்பு வழங்கப்படல், 

ஏ) கடன்தீர்க்க வகையற்றவர் எனப் பிரகடனப்படுத்தப்படல்,

ஐ) இலங்கைப் பிரசையல்லாத அல்லது பிரசாவுரிமையில்லாத ஒருவர்

(iv) பதவியுயர்வின் போது கொடுக்கப்படும் சம்பளம்

பதவியுயர்வுக்கான பதவியின் சம்பளமானது, கீழ்வரும் வகையில் வழங்கப்படும்.

அ) அலுவலர் ஆண்டொன்றுக்குள் பதவியுயர்வுத் திகதி வரை ஆண்டேற்றம் (Increment)  ஒன்றினை உழைத்திருப்பாராயின், அதற்குச் சமமானதொரு தொகை வேறாக வழங்கப்படல் வேண்டும்.

ஆ) இறுதியாகப் பெற்றுக்கொண்ட சம்பளம், புதிய சம்பளத்திட்டத்தின் சம்பளப் படிநிலைகளுக்கிடையில் வருமாயின், அவர் அடுத்த உயர்ந்த சம்பளப் படிநிலையில் வைக்கப்படல் வேண்டும்.

இ) அத்துடன் அவருக்கு மேலதிக சம்பள ஏற்றமொன்றும் Additional Increment வழங்கப்பட வேண்டும்.

ஈ) பதவியுயர்வின் போது, இறுதியாகப் பெற்றுக்கொண்ட சம்பளமானது, புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்திற்கு அல்லது ஒரு சம்பளப் படிநிலைக்கு ஒத்திருக்குமிடத்து, அவர் கிட்டிய உயர்ந்த படிநிலையில் வைக்கப்படல் வேண்டும்.

உ) கடைசியாகப் பெற்ற சம்பளமானது, புதிய சம்பளத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்திலும் ஒரு சம்பள ஏற்றத்தினால் அல்லது அதனிலும் கூடுதலான ஏற்றங்களினால் குறையுமாயின் புதிய சம்பளத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளப் படிமுறையில் வழங்கப்படல் வேண்டும்.

ஊ) இறுதியாகப் பெற்ற சம்பளமானது, புதிய சம்பளத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்திலும் பார்க்கக் ஒரு சம்பள ஏற்றப் பெறுமதிக்கு (புதிய பதவிக்குரிய) குறைவானதாயின், புதிய சம்பள திட்டத்தின் ஆரம்ப படிநிலையில் வைத்து மேலதிக சம்பள ஏற்றம் ஒன்று வழங்கப்படல் வேண்டும்.

எ) அவரது எதிர்கால சம்பள ஏற்றத் திகதி பதவி உயர்வு அமுலுக்கு வந்த திகதியாகும்.

(v) மேலதிக நேரக் கொடுப்பனவு கொடுக்கத்தக்க சந்தர்ப்பங்கள்

1) மேலதிக நேரப்பணியினை  நிறைவேற்றுவதற்கு திணைக்களத்தில் பொருத்தமான வேலைத் திட்டமொன்றினை அமைத்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில்.

2) குறிப்பாக விதித்துரைக்கப்பட்டுள்ளவையும், வழமையான கடமை நேரத்தில் மேற்கொள்ள முடியாதவையுமான வேலைகளுக்கு 

3) அவசரமாக நிறைவேற்ற வேண்டிய விசேட பணியொன்றை நிறைவேற்றுவதற்காக குறிப்பிடத்தக்களவு காலத்திற்கு அதிகமான மணித்தியாலங்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களில்,

4) திணைக்களத்தில் நாளாந்தம் மேலதிக நேர வேலை காணப்படுகின்ற சந்தர்ப்பமொன்றில்  பரிமாற்று மேலதிக நேரப்படி ஒன்றினை விதிக்குமாறு தாபன பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தல் வேண்டும்.

2) “வினைத்திறமைகாண் தடைக்கு” அப்பால் பதவியுயர்வளித்தல் தொடர்பாகத் தாபனக் கோவையின் அத்தியாயம் II இல் உள்ள ஏற்பாடுகளை விவரிக்க.

அ) வினைத்திறன் காண் தடையொன்றிற்கு அப்பால் வழங்கப்படுகின்ற பதவியுயர்வானது ஆட்சேர்ப்புத் திட்டம் அல்லது சேவைப்பிரமாணக் குறிப்பினால் வரையறுக்கப்படும்.

ஆ) ஓர் அலுவலருக்கு வினைத்திறமைகாண் தடையொன்றிற்கு அப்பால் பதவி உயர்வு வழங்க முன்பு, அவருக்கு குறித்த பதவி உயர்வுக்குரிய  தகுதி உள்ளதென திணைக்களத் தலைவரினால் சான்றிதழ் வழங்கப்படல் வேண்டும்.

இ) வினைத்திறன் தடைக்கு மேலான பதவியுயர்வின் நிபந்தனையொன்றாக பரீட்சையொன்றில் சித்தியடைய வேண்டுமென குறிப்பிடப்படுமிடத்து, அவர் அப்பரீட்சையில் சித்தியடைந்த திகதி குறித்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

ஈ) பதவி உறுதிப்படுத்தல், பதவியுயர்வு போன்ற நோக்கமொன்றிற்காக அலுவலர் ஒருவர் பரீட்சையில் சித்திடைந்துள்ளவிடத்து அவர் அப்பரீட்சையில் சித்தியடைந்த திகதியாக கருத வேண்டியது குறித்த பரீட்சை ஆரம்பிக்கின்ற திகதியாகும். 

உ) வினைத்திறன் தடைக்கு மேலாகப் பதவியுயர்வு வழங்கப்படுவதற்கு ஓர் அலுவலர் தகுதியற்றவர் என கருதப்பட்டால் அந்த முடிவினை அதற்கான காரணங்களுடன் அவ்வலுவலருக்கு எழுத்தில் அறிவிக்க வேண்டும். 

3) ஆட்சேர்ப்புத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய வினைத்திறமைகாண் தடை தொடர்பான ஏற்பாடுகளை 3/98 ஆம் இலக்கப் பொது நிருவாகச் சுற்றுநிருபத்தின் மூலம் திருத்தப்பட்ட தாபனக் கோவையின் அத்தியாயம் II ஐக் கொண்டு விளக்குக.

அரசாங்க சேவையின் எல்லாப் பதவிகளுக்குமான ஆட்சேர்ப்புத் திட்டங்கள் தயார்படுத்துவது சம்பந்தமான ஏற்பாடுகள் உள்ளடங்கிய தாபன விதிக் கோவையின் I ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பிரிவு மற்றும்  அப்பதவிகளோடு தொடர்புடைய வினைத்திறன்காண் தடைகள் பற்றிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள 15 ஆம் பிரிவு என்பன அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 03/98இன் மூலம் திருத்தப்பட்டது. 

திருத்தப்பட்டமைக்கான காரணங்கள்

அ) ஆட்சேர்ப்புத் திட்டங்கள் ‘தயார்படுத்தப்படும் போதும் திருத்தப்படும் போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வினைத்திறன்காண் தடைகள் பற்றிப் போதியளவு கவனம் செலுத்தாது விடுவது,

ஆ) பெரும்பாலும் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் வினைத்திறன்காண் தடையொன்று இருக்கிறது என்று மட்டுமே குறிப்பிடப்படுவதுடன் அந்தத் தடையோடு சம்பந்தப்பட்ட விபரங்கள் உள்ளடக்காமையால் பிற்காலத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்றது.

இதற்கமைய  ஆட்சேர்ப்புத் திட்டங்களைத் தயாரிக்கும் போதும் திருத்தங்கள் செய்யும் போதும் வினைத்திறன்காண் தடைகள் பற்றிக் கீழ் வரும் விபரங்களை ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு திணைக்களத் தலைவர்களும் அமைச்சுக்களின் செயலாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன்  அதை தாபனப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனும் விடயம் தெரிவிக்கப்பட்டது. 

அ) அவசியப்படும் பதவிகள் தொடர்பாக மாத்திரம் வினைத்திறன்  தடையொன்றை அல்லது தடைகளை ஆட்சேர்ப்பு திட்டத்தில் / சேவைப் பிரமாண குறிப்பில் சேர்த்தல் வேண்டும்.

ஆ) சம்பள அளவுத் திட்டத்தை குறிக்கும் போது அதன் 04 ஆம் சம்பளப் படிநிடிலையை அடைய முன் 1ம் வினைத்திறன்காண் தடையிலும், 07 ஆம் சம்பளப் படிநிலையை அடைய முன் 2ம் வினைத்திறன்காண் தடையொன்றை சித்தியடைய வேண்டுமென்பதையும் தெரிவித்தல் வேண்டும்.

இ) வினைத்திறமை காண் தடைப்பரீட்சையானது எழுத்து மூலப் பரீட்சையா, தொழில் சார் பரீட்சையா, வாய்மொழி மூலப் பரீட்சையா, அல்லது இவை எல்லாம் சேர்ந்த ஒரு பரீட்சையா என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.

(ஆ). பரீட்சையானது எழுத்துப் பரீட்சையாயின் அதன் பாடங்களையும், பாடத்திட்டங்களையும் தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். அதே ஏனைய பாடங்களும் விபரமாக குறிப்பிடப்படல் வேண்டும்.

(உ). வினைத்திறன் காண் தடைகள் அனைத்தும் ஒரு வருடத்தில் எத்தனை தடவைகள் நடாத்தப்படும் எனவும் யாரால் நடாத்தப்படும் எனவும் குறிப்பிடுதல் வேண்டும்.

(ஊ). எழுத்துப் பரீட்சையாயின் அதற்கான பாடங்களின் புள்ளிகள் தொடர்பான விபரம் பூரணமாக வழங்கப்படல் வேண்டும். 

(எ). 45 வயது பூர்த்தியானதன் காரணமாக வினைத்திறமை காண் தடைப்பரீட்சையிலிருந்து விலக்களிப்பு செய்யப்படமாட்டாது என்பதுடன் ஆட்சேர்ப்புத் திட்டங்களிலோ சேவைப் பிரமாணத்திலோ வயது பூர்த்தியானதன் காரணமாக வினைத்திறமை காண் தடைப்பரீட்சைகளிலிருந்து விலக்களிப்புச் செய்யும் ஏற்பாடுகளை உள்ளடக்கக் கூடாது.

4) அரசாங்க அலுவலரை அரசாங்க சேவையில் வேறொரு பதவிக்கு நியமிக்கப்படுவதற்காக விடுவிப்பதற்கும் அரசாங்க சேவையிலிருந்து புறச் சேவைக்காக விடுவிப்பதற்குமிடையே உள்ள வேறுபாடுகளைத் தாபனக் கோவையின் அத்தியாயம் V ஐக் கொண்டு விளக்குக.


5) வரலாற்றுத் தாள் என்பதை இனங்கண்டு, அதில் இடம்பெற வேண்டிய விடயங்களை விளக்குக.

பதவியொன்றுக்கு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படும் போது, அவ்வலுவலருக்கான சேவைப் பதிவுகளை பதிந்து பேணப்படுவதற்காக தயாரிக்கப்படும் படிவம் வரலாற்றுத்தாள் எனப்படுகின்றது.

ஓய்வூதிய பதவிக்குரிய உத்தியோகத்தர்கள் தொடர்பாக வரலாற்றுத்தாள் பொது 53அ என்னும் படிவத்திலும், மாதச் சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் வரலாற்றுத் தாள் 234 என்ற பொதுப் படிவத்திலும், நாட் சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர் ஒருவரின் வரலாற்றுத்தாள் 226 அ என்ற பொதுப்படிவத்திலும் பேணப்படல் வேண்டும்.

இதில் கீழ்வரும் விடயங்கள் இடம்பெறும். 

1) அலுவலரின் பெயர்

2) பிறந்த திகதி

3) கல்வித்தகைமை

4) முதல் நியமனம் தொடர்பான விபரங்கள்,

5) இடமாற்றம் தொடர்பான விபரங்கள்,

6) பதவியுயர்வுகள் தொடர்பான விபரங்கள்,

7) வேதனவேற்றம் தொடர்பான விபரங்கள்,

8) சேவை உறுதிப்படுத்தல் தொடர்பான விபரம்,

9) ஓய்வூதிய இலக்கம், 

10) வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்த விபரங்கள், 

11) அரைச் சம்பள லீவு மற்றும் சம்பளமற்ற லீவு என்பன

6) வரலாற்றுத் தாள் பேணப்படும் விதத்தை விவரிக்க.

அ) வரலாற்றுத் தாள்கள் சாவியினால் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஆ) அவை அகரவரிசை ஒழுங்கில் தயாரிக்கப்பட்டு பேணப்படல் வேண்டும்.

இ) அதனை பேணுகின்ற பணி சிரேட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஒருவரிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

ஈ) வரலாற்றுத் தாள்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், தொடர்பாக சம்பந்தப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

உ) அரைச் சம்பள லீவு மற்றும் சம்பளமற்ற லீவு என்பன பற்றியும்  அவ்வரலாற்றுத் தாள்களில் பதிதல் வேண்டும்.

ஊ) மெச்சுரைகளும், கண்டனங்களும் படிவம் 230ஆ என்ற பொதுப் படிவத்தில் பதியப்பட்டு வரலாற்றுத் தாள்களுடன் கோவை செய்யப்படல் வேண்டும்.

எ) வரலாற்றுத்தாளை தயாரிக்க  ஆரம்பிக்கின்ற போதே அலுவலரின் பிறந்த திகதியை அதில் குறித்துக் கொள்ளல் வேண்டும்.

ஏ) வரலாற்றுத்தாளில் பதியப்படுகின்ற பதிவுகளுக்கு பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் முதலெழுத்தொப்பம் இடல் வேண்டும்.

ஐ) அலுவலரின் பிறந்த ஆண்டு மட்டும் தெரிந்தால் அந்த ஆண்டில் July மாதம் 1 ஆந் திகதியைப் பிறந்த நாளாகக் குறித்தல் வேண்டும்.

ஒ) பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் அடிக்கடி, 03 மாதத்திற்கொருமுறையேனும் வரலாற்றுத் தாளைப் பரிசீலித்து சரி பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

ஓ) வரலாற்றுத் தாள்களை திணைக்களத் தலைவரினால் குறிப்பாக அதிகாரமளிக்கப்பட்ட ஒருவர் தவிர்ந்த வேறெவரும் பார்க்க அனுமதிக்க கூடாது.

ஒள) ஒவ்வோர் உத்தியோகத்தருக்கும் தனது வரலாற்றுத்தாளை 5 ஆண்டுக்கு ஒரு முறை, அதிகாரமளிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையில் பார்ப்பதற்கு அனுமதித்தல் வேண்டும்.

ஃ) அதன் பின்னர் அதில் உள்ள விவரங்கள் யாவும் சரியானவை என அவ்வலுவலரிடமிருந்து சான்றிதழொன்று பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

7) சம்பளமற்ற பிரசவ (விசேட) விடுதலையை அளித்தல் தொடர்பாக 16/99 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின் மூலம் திருத்தப்பட்ட தாபனக் கோவையின் அத்தியாயம் XII இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை விளக்குக.

குழந்தை பிறப்புக்காக 84 அலுவலக நாட்களுக்கு முழுச் சம்பளத்துடனான விடுமுறைகள் பெற்றுக்கொண்டதன் பின்னர் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரைச் சம்பளத்துடனான 84 நாள் லீவினை பெற்றுக்கொள்ள முடியும்.

அரைச் சம்பள லீவுக் காலத்திற்குள் வருகின்ற அரசாங்க விடுமுறைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களை அரைச் சம்பள லீவுகளாகக் கணிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட லீவுகள் முடிந்ததன் பின்னர் தொடர்ந்தும் குழந்தையைப் பராமரிக்கின்ற தேவை ஏற்படின் முழுச்சம்பளமற்ற 84 நாள் லீவை பெறமுடியும்.

இவ்வாறான லீவுகள் அங்கீகரிக்கப்படுவது குழந்தை உயிர்வாழும் போது மாத்திரமேயாகும். ஏதேனும் காரணத்தால் குழந்தை மரணித்து விட்டால் அத்திகதி தொடக்கம் ஏழு நாட்களுக்குப் பின்னர் மேற்படி விடுமுறைகள் செல்லுபடியற்றதாகும்.

குறித்த லீவுகள் அலுவலரின் சம்பள ஏற்றங்களுக்கும் ஓய்வூதிய அலுவல்களுக்கும் தடையாக அமைதலாகாது. உரிய அலுவலர்  மேற்படி லீவுகளில் ஒரு பகுதியை இரத்து செய்து சேவைக்குச் சமுகமளிக்க விரும்பினால் திணைக்களத் தலைவருக்கு அறிவித்து இரத்து செய்யலாம்.

8) தாபனக் கோவையின் அத்தியாயம் XXIV இன் ஏற்பாடுகளுக்கு ஏற்ப இடுக்கண் கடனை எவ்வித இடுக்கண்ணிற்காகப் பெறலாம்?

அ) தீ, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் மூலம் ஏற்படக்கூடிய இழப்புக்களினை ஈடு செய்ய,

ஆ) மருத்துவச் செலவுகள்,

இ) உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சுகயீனம் காரணமாக பெற்ற கடனை ஈடு செய்ய,

ஈ) வீட்டு வாடகை செலுத்ததுவதற்கு,

உ) அலுவலரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணச் செலவுகளுக்காக,

ஊ) உத்தியோகத்தர்  அல்லது அவரது வாழ்க்கைக் துணைக்குச் உரித்தான வீடொன்றின் திருத்தங்களுக்கு,

எ) கடமைக்காக மோட்டார் வாகனமொன்றினைப் பயன்படுத்த வேண்டியுள்ள உத்தியோகத்தர் ஒருவரின்  மோட்டர் வாகனத்தின் திருத்தப் பணிகளுக்காக,

ஏ) தனது பொறுப்பிலுள்ள  பிள்ளையொன்றிற்கு பாடசாலைப் புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்காக,

ஐ) அலுவலரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளிநாடு ஒன்றிற்கு செல்லும் போது விமானப் பயணச் சீட்டினை கொள்வனவு செய்ய,

9) இடுக்கண் கடனைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான மற்றைய ஏற்பாடுகள் பற்றிக் குறிப்பு எழுதுக.

இடுக்கண் கடனை பெற்றுக் கொள்வதற்காக கீழ்வரும் தகைமைகள் இருத்தல் வேண்டும்.

அ) நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துடையதுமான பதவியிலுள்ள அலுவலர்,

ஆ) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புக்கு உரித்துடைய நிரந்தர அல்லது தற்காலிக அலுவலர்,

பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்தொகை – 03 மாத சம்பள அளவிற்குள் உண்மையாகவே செலவிட்ட அல்லது செலவிட வேண்டிய தொகையாகும்,

தற்காலிக உத்தியோகத்தருக்கு  வழங்கப்படுகின்ற கடன் தொகை மற்றும் அவர் செலுத்த வேண்டிய ஏனைய கடன் தொகை ஆகியவற்றின் கூட்டுத் தொகையானது அவர் ஊ.சே.நிதியத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்புத் தொகையின் கூட்டுத்தொகையை விஞ்சக் கூடாது.

வீட்டு வாடகைக்கான முற்பணமொன்றை செலுத்துவதற்கான கடன் தொகையானது,  மூன்று மாதத்திற்குரிய அனுமதிக்கப்பட்ட வீட்டு வாடகைத் தொகைக்கு உட்பட்டதாகும்.

பிணையாளர்கள் 

சேவைக்காலம் 10வருடங்களுக்குக் குறைந்த நிரந்தர, ஓய்வூதிய உரித்துடையவர்களுக்கு 10 வருடங்களுக்கு குறையாத சேவைக் காலத்துடன் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய ஒரு பிணையாளியோ அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்தைக் கொண்ட நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய இரு பிணையாளிகளையோ முன்வைத்தல் வேண்டும்.

சேவைக்காலம் 10 வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு பிணையாளிகள் அவசியமில்லை.

அக்ரஹார காப்புறுதி முறையின் கடன் பாதுகாப்புக் காப்புறுதிக்காக உரிமையுள்ள ஒருவர் தொடர்பிலாயின்  பிணையாளர்களை முன்வைப்பதற்குப் பதிலாக காப்புறுதிக் கடன் பாதுகாப்புச் சான்றிதழை பிணையாக சமர்ப்பிக்க முடியும்.

10) தாபனக் கோவையின் அத்தியாயம் XXVIII இற்கு ஏற்ப அரசகருமக் கடிதம் எழுதும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் யாவை?

1. ஒரு கடிதம் முடிந்தளவு ஒரு விடயத்தை மட்டும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

2. கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் கடித இலக்கம், திகதி என்பவற்றை குறிப்பிடல்.

3. கையொப்பமிட்ட திகதியையே கடிதத்தில் இடல்.

4. சுருக்கமாக கடிதத்துக்குத் தலைப்பிடல்.

5. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஐயா, தங்கள் விசுவாசமுள்ள என்ற வாசகங்களைப் பாவித்தல்.

6. பாராளுமன்ற உறுப்பினரொருவர் பதவிப் பெயருக்கோ தனிப்பட்ட பெயருக்கோ கடிதம் அனுப்பும் போது உத்தியோக பூர்வமாக பதில் அனுப்புதல்.

7. உரிய கடிதம் முன்னைய கடிதங்களுடன் தொடர்பு பட்டால் அவற்றின் இலக்கங்களைக் குறிப்பிடல்.

8. பிரதிகள் இணைத்தனுப்ப வேண்டியிருப்பின் கவனமாக அவற்றை இணைத்தல்.

9. பந்திகள் இலக்கமிடல்.

10. சகலதும் உத்தியோகபூர்வமாகவும் விளக்கமானதாகவும் மேற் கொள்ளப்படல் வேண்டும்.

11. முடியுமானவரை சகல கடிதங்களிலும் திணைக்களத் தலைவரே கையொப்பமிடுதல் வேண்டும்.

12. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் திணைக்களத் தலைவரின் பெயரில் எந்த ஆவணங்களையோ அல்லது பிரதிகளையோ “திணைக்களத் தலைவருக்காக” எனக் குறிப்பிட்டு பதவிப் பெயர், முழுப் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு கையொப்பமிடுதல் வேண்டும்.

13. ஒரு திணைக்களத்திலிருந்து வேறொரு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை உரிய நபருக்கு வழங்கப்படக்கூடாது. எனினும் தேவைப்படுமிடத்து சாராம்சத்தை விளக்கலாம்.

11) அரசாங்க அலுவலர் தமது உரிமைகளிலே செல்வாக்குச் செலுத்தும் விடயம் பற்றி முறையாக நிறுவப்பட்ட அதிகார சபைக்கு வேண்டுகோளை அல்லது மேன்முறையீட்டைச் (Appeal) சமர்ப்பித்துலுடன் தொடர்புபட்ட எற்பாடுகள் யாவை?

MSO III EB

No comments:

Post a Comment