ஒரு திணைக்களத்தினால் இன்னொரு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வழங்கு பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கொடுப்பனவுகள் செய்யப்படும் விதங்களை குறிப்பிடுக.
1) காசோலைகள் மற்றும் காசுக்கட்டளைகள் மூலம் Cheque and Money order
2) கைமாற்றல் முறைக் கொடுப்பனவுகள் மூலம்
ஒரு திணைக்களத்தின் காப்பு பெட்டிகளில் வைக்க வேண்டிய பொருட்கள் எவை?
1) திணைக்களத்திலுள்ள அரசாங்க பணம்
2) முத்திரைகள், Stamp
3) உத்தரவுச்சீட்டு புத்தகங்கள், மற்றும் பற்றுச்சீட்டு புத்தகங்கள்
4) காசோலை புத்தகங்கள்,
5) நீதிமன்ற கட்டளையிலுள்ள சான்றுப் புத்தகங்கள்
உபயோகிக்கப்பட்ட அல்லது உபயோகிக்கப்படாத அடியிதழ் சேர் புத்தகங்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?
1) பொறுப்பான அலுவலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்
2) அவ்விழப்பு எவ்வாறு நடந்தது என்பதை உறுதிப்படுத்தல்
3) மீண்டும் இவ் இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
4) கட்டணங்கள், செலுத்தப்படுவதன் மூலம் வழங்கப்படும் உத்தரவுப்பத்திரங்களை கொண்ட அடியிதழ் சேர் புத்தகங்களாயின் நிபி 102 இன்படி நடவடிக்கை எடுத்தல்
5) அறவிட வேண்டிய ஆகக்கூடிய பெறுமதி 105(1) இன்படி தீர்மானிக்கப்படும்
6) இழப்பு தொடர்பாக இறுதிக்கட்டளை கிடைத்ததும் உரிய பதிவேடுகளில் பதிவுகளை செய்து படிவங்களை பதிவழித்துவிடலாம்
8) உரிய கட்டளைகளின் பிரதிகள் கணக்காய்வாளர் அதிபதிக்கும் அடியிதழ்சேர் புத்தகங்களை வழங்கிய அதிகாரிகளுக்கும் அனுப்புதல் வேண்டும்.
திணைக்களங்களின் கட்டுநிதியும், உபகட்டு நிதியும் அடிக்கடி எவ்வாறு சரிபார்த்தல் மேற்கொள்ளப்படுகிறது?
1) திணைக்களங்களில் உள்ள கட்டுநிதி அல்லது உபகட்டு நிதி மாதத்தில் ஒரு முறையாவது சரிபார்க்கப்படல் வேண்டும்.
2) படிவங்கள்
3) முறையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
குறுக்கு கோடழித்த காசோலைகள் வழங்கும் விதத்தினை குறிப்பிடுக.
1) திணைக்களத்தால் வழங்கப்படும் சகல காசோலைகளும் குறுக்கு கோடிடப்பட்டிருத்தல் வேண்டும்
2) பெறுனர் ஒருவருக்கு கோடழித்த காசோலை வழங்க வேண்டுமாயின் பதவிநிலை அலுவலரின் அதிகாரம் தேவையாகும்.
3) காசோலையில் கோடழிப்பதற்கு “குறுக்கு கோடிடல் நீக்கப்பட்டுள்ளது” என புறக்குறிப்பிடல் வேண்டும்
4) அக் காசோலையில் அதிகாரம் பெற்றுள்ள இரு அலுவலர்கள் அத்தாட்சிப்படுத்தல் வேண்டும்.
பழுதடைந்த, மற்றும் அழிக்கப்பட்ட காசோலைகளும், காசோலைகளின் அடியிதழ்களும் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?
1) திணைக்களத்தின் காசோலை ஒன்று பழுதடைந்தால் அது பொருத்தமான வகையில் அழிக்கப்படல் வேண்டும்.
2) இவ்வாறு அழிக்கப்பட்ட காசோலையானது அதன் அடியிதழுடன் சேர்த்து காசோலை புத்தகத்துடன் ,இணைக்கப்படல் வேண்டும்.
3) இது கணக்கு பரிசோதனையில் அங்கீகரிக்கப்படல் வேண்டும்
4) அதன் பின்னர் காசோலைப்புத்தகத்திலுள்ள இறுதி காசோலையின் திகதியிலிருந்து 5 வருடங்களுக்கு பின்னர் அழிக்கப்படலாம்.
திணைக்களம் ஒன்றினால் வழங்கப்படும் காசோலையின் பெறுமதி காலத்தை நீடிக்குமுன் கவனிக்க வேண்டிய விடயங்களை குறிப்பிடுக.
1) குறித்த காசோலை ஏற்கனவே செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதா எனும் விபரம்
2) காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது
3) அதற்கு பணம் கொடுக்க முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதா என்பது
4) காசேட்டையும், காசோலையின் அடியிதழையும் பரிசீலனை செய்தல்
ஒவ்வொரு திணைக்களமும் திறைசேரியால் பேணப்படும் கணக்குகளுடன் இணக்கம் செய்வதற்காக பேணப்படும் கணக்குகள் எவை?
திறைசேரியால் பேணப்படும் முதலீடுகளின் பதிவேட்டில் அடங்கும் விடயங்கள் – 431(3)
1) தோற்றப் பெறுமானம்
2) கொள்விலை
3) விற்பனையினால் தேறிய தொகை
4) அதனால் ஏற்பட்ட இலாபம், அல்லது நட்டம் Profit or lost
5) காலாண்டில் அல்லது அரையாண்டில் பெறப்பட்ட பங்கிலாபம்
6) அவை பெறப்பட்ட திகதி
மேற் கொள்ளப்பட்ட செலவு பொறுப்புக்களின் கூற்று -450
1) ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக கணக்கீட்டு உத்தியோகத்தரால் தயாரிக்கப்படும்.
2) 10ம் திகதிக்குள் முந்திய மாதத்திற்கான செலவுப் பொழிப்புக்களின் மாத அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
3) இதற்கான படிவம் திறைசேரி – 170
4) பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஒரு திணைக்களத்தில் ஆளுக்குரிய வேதனாதிகள் பதிவேடு பேணப்படுவதன் நோக்கங்களை குறிப்பிடுக.
1) ஒவ்வொரு பதவியிலும் திணைக்களமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் கோப்புக்கள் அதிகரிக்கப்படாதிருத்தல்
2) அங்கீகரிக்கப்பட்ட வேதன அளவுத்திட்டங்கள் கூலிகளின் விகிதங்களுக்கமைய ஊதியங்கள் வழங்கப்படுதல்
3) ஒவ்வொரு அலுவலருக்கும் வழங்கப்படும் கொடுப்பனவுகளை தீர்மானித்தல்
4) கொடுக்க வேண்டிய சரியான தொகைகளை தீர்மானித்தல்
ஆண்டு கணக்குகளில் ஏற்பட்ட பிழைகள் எவ்வாறு சீராக்கம் செய்யப்படும்?
1) கணக்குகளில் உள்ள வழுக்கள் சீராக்கலின் மூலம் சரிப்படுத்தப்படலாம்
2) பிழைகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே சீராக்கப்பட வேண்டும்.
3) பிழைகள் ஏற்பட்ட நிதியாண்டுக்குரிய திறைசேரி புத்தகங்கள் முடிக்கப்படுமுன்னர் அவை செய்யப்படல் வேண்டும்
4) சரி செய்யப்படாத பிழைகள் அவ்வாண்டுக் கணக்குகளில் பிழையான விதிப்புகளாகவே இருக்கும்
5) சீராக்கங்கள் அனைத்தும் கைமாற்றல் கொடுப்பனவு மூலமே சீராக்கப்படல் வேண்டும்.
திணைக்கள கணக்கீட்டு நடவடிக்கைகளில் ஏற்படும் பிழைகள் உரிய நேரங்களில் சீர் செய்யப்படவிட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது?
1) சம்பந்தப்பட்ட கணக்கீட்டு உத்தியோகத்தரே பொறுப்பாளியாவார்
2) குறித்த பிழையானது கணக்காய்வாளர் அதிபதியினால் அவரது ஆண்டறிக்கையில் எடுத்துக் காட்டப்படும்
3) இதன்படி அரசாங்க கணக்கு குழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
காணிநிர்ணய அறவீட்டுக்காக வழங்கப்படும் பற்றுச்சீட்டு விபரங்களை குறிப்பிடுக.
1) காணி உரிமை நிர்ணய ஆணையாளரினால் வழங்கப்படுவது – படிவம் நிர்ணயம் – 43
2) இறைவரி உத்தியோகத்தரால் வழங்கப்படுவது – படிவம் நிர்ணயம் – 70
முற்பணக்கணக்குகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட சுற்றாய்வு சபை கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கும் அறிக்கையில் உள்ளடங்கும் விடயங்கள் எவை?
1) டிசம்பர் 31ம் திகதியில் திணைக்கள கையிருப்புக்கள் உள்ளதென்பதையும் அவற்றின் பெறுமதியையும்
2) முயற்சிகளின் நிலையான சொத்துக்கள் உள்ளதென்பதையும் அவை ஒவ்வொன்றினதும் தற்போதைய நிலைமைகளையும்
திணைக்கள முற்பணக்கணக்கு தொடர்பான சுற்றாய்வு சபையின் அவதானிப்புகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை குறிப்பிடுக.
1) கணக்குப் புத்தகங்களில் பதியப்பட்ட தொகைக்கும், கையிருப்பில் உள்ள தொகைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பின்
2) கையிருப்பின் புத்தகப் பெறுமதிக்கும் சபையால் கணிக்கப்பட்ட பெறுமதிக்கும் இடையில் வித்தியாசம் இருப்பின்
3) நிலையான சொத்துக்கள் இல்லாமல் போய் விட்டால் அதற்கான நடவடிக்கைகள் கணக்கீட்டு உத்தியோகத்தரால் எடுக்கப்படும்.
முற்பணக்கணக்கில் வைத்திருக்கும் பொருட்களை கைவிடப்படும் தீர்மானம் எடுப்பதற்கான சுற்றாய்வு சபை யாரால் நியமிக்கப்படுகின்றது?
பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரால்
நிதிசார் கடமைகளை ஒரு மாவட்டச் செயலாளர் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை குறிப்பிடுக.
1) சட்டத்தினால் பிறவாறு குறிப்பிட்டாலொழிய ஒரு அரசாங்க அதிபர் தனது நிதிசார் கடமைகளை கணக்காளர் அல்லது வேறு தகுந்த உத்தியோகத்தரிடம் கையளிக்கலாம்.
2) அலுவலக உதவியாளரை அல்லது மேலதிக அலுவல் உதவியாளரை கச்சேரியின் நிதி நடவடிக்கைகளுக்கு பொது பொறுப்புடையவராக்கலாம்.
3) அவருக்கு நிபி 144இன்படி எந்தக் கடமைகளையும் ஒப்படைக்கலாம்.
காசோலை மாற்றிக்கொடுத்தல் சம்பந்தமாக அரசாங்க அதிபரால் வங்கிக்கு அனுப்பப்படும் அறிவுறுத்தலுக்கான படிவம் எது?
படிவம் – 227
கச்சேரியின் மாதக் கூற்றுக்கள் யாருக்கு அனுப்பப்படல் வேண்டும்? – நி.பி 559
1) மாதாமாதம் கிடைக்கப்பெறும் பண வரவுகள், அனுப்பும் பணங்கள் பற்றி கூற்றுக்கள், உரிய பற்றுச்சீட்டு ஆதாரத்துடன் கச்சேரி கணக்குகளும் சேர்த்து கணக்காய்வாள அதிபதிக்கு அனுப்புதல் வேண்டும்.
2) பிரதி திறைசேரிக்கு அனுப்புதல் வேண்டும்.
3) கொடுக்கல் வாங்கல் நடைபெறாவிடின் வெற்றுக்கூற்று அனுப்புதல் வேண்டும்.
கச்சேரியில் சமப்படுத்தல் கணக்கு எவ்வாறு பேணப்படுகிறது?
1) கச்சேரி வைப்பு பேரேட்டில் முடிவில் சில பக்கங்கள் சமப்படுத்தல் கணக்குக்கென ஒதுக்கப்படல் வேண்டும்.
2) இதில் முந்திய மாதத்திலிருந்து மேல் கொண்டுவரப்பட்ட மீதி பதியப்படல் வேண்டும்.
3) வைப்புக்கள் எல்லாவற்றினதும் மொத்தநாள் வரவுகள், மொத்தநாள் கொடுப்பனவுகள் எல்லாம் பதியப்படும்
4) ஒவ்வொரு கணக்கும் ஒவ்வொரு மாதமும் சமப்படுத்தப்பட்டு மீதி தொகுப்பு தயாரிக்கப்படல் வேண்டும்.
5) இம்மீதிகளின் கூட்டுத்தொகை சமப்படுத்தல் கணக்கில் உள்ள மீதியோடு ஒப்பிடப்படல் வேண்டும்.
6) வித்தியாசம் காணப்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
திணைக்களத்தினால் கேள்விகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்படும் விளம்பரத்தில் அடங்கும் விடயங்கள் எவை?- 700(6)
1) கேள்விகள் கோரப்பட்ட விடயங்களின் விபரம்
2) பெறப்பட்ட கேள்விகளின் மொத்த எண்ணிக்கை
3) தெரிவான கேள்விதாரரின் பெயர்
4) கேள்வி வழங்கப்பட்ட தொகை
5) உள்ளுரில் முகவரை கொண்டுள்ள வெளிநாட்டு முதல்வருக்கு கேள்வி வழங்கபப்பட்டிருப்பின் உள்ளுர் முகவரின் பெயர்
6) உள்ளுர் முகவருக்கு செலுத்த வேண்டிய தரகின் தொகை.
ஒப்பந்தங்கள் கையொப்பமிடல் தொடர்பிலான விதிமுறைகளை குறிப்பிடுக. 702
1) சட்டமா அதிபரினால் அங்கீகரிக்கப்ட்ட படிவங்களில் கையொப்பமிடல் வேண்டும்
3) ஒப்பந்த ஆவணங்களில் இரு தரப்பினரும் முதலெழுத்தொப்பமிடல் வேண்டும்
4) மூன்று பிரதியாக ஒப்பந்தங்கள் கையொப்பமிடல் வேண்டும்
பூரணமான ஒப்பந்தம் ஒன்றில் உள்ளடங்கும் ஆவணங்கள் எவை? – 702(2)
ஒரு அமைச்சுக்குரிய கேள்விச்சபையின் அதிகாரங்களை திணைக்களத்திற்கான கேள்விச்சபை பயன் படுத்துவதற்கான நிபந்தனைகள் எவை? – 706
1) எவையேனும் நிர்மாண வேலைகளை செய்வதற்காக திணைக்களத்தினால் ஒழுங்குகள் செய்வதற்கு உரிய அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
2) வழங்கல்களும் சேவைகளும் தொடர்பாக குறித்த அமைச்சின் செயலாளர் தாம் விதித்த நிபந்தனைகளை பயன்படுத்துமாறு திணைக்கள கேள்விச் சபைக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே நிபி 690(5) இன்படி நடவடிக்கை முடியும்.
3) யாதாயினும் புதிய விடயம் தொடர்பாக உரிய அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசிக்கப்படல் வேண்டும்.
கேள்வி நடைமுறைகள் தொடர்பிலான இறுதி அதிகாரி யார்?- 708
1) கேள்விகள், ஒப்பந்தங்கள், மற்றும் இருப்பு பொருட்கள் தொடர்பில் இறுதி அதிகாரி நிதியமைச்சராவார்
2) முன்னனுமதிக்கான விண்ணப்பம் திறைசேரி செயலாளர் மூலமாக நிதியமைச்சருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
ஒரு திணைக்களம் இருப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் விதங்களை குறிப்பிடுக. – 717
1) கொ.ம.சே.கூ. இடமிருந்து தேவைப்பட்டியல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
2) அரசாங்க கைத்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்
3) அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் ஒருவரிடமிருந்து
5) கேள்வி நடைமுறை மூலம்
தருவிக்கும் பொருட்பட்டியல், மற்றும் தேவைப்பட்டியல்களில் கையொப்பமிடும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் தொடர்பான விபரம் யாருக்கு அனுப்பப்படல் வேண்டும்? 718
அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர் நிரல் ஒன்று, அவர்களின் மாதிரி கையொப்பங்கள் 6 என்பன ஒவ்வொரு திணைக்கள தலைவராலும் கொ.ம.சே.கூ தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.
அவ்வாறே செய்யப்படும் மாற்றங்கள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment